15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்
- ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் - ரூர்கேலாவில் கடந்த 13-ம் தேதி தொடங்கி, நேற்று (ஜன. 29) வரை ஆடவருக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது.
- இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
- அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதையடுத்து, நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி மற்றும் ஜெர்மனி அணி நேருக்கு நேர் மோதின.
- ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம வகிக்க பெனாலிடி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி சூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கண்க்கில் வீழ்த்தி ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
- சர்வதேச அளவில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெல்ஜியம் 15 முறையும், ஜெர்மனி 14 முறையும் வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (24 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (35 வயது, 4வது ரேங்க்) 6-3, 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று 10வது முறையாக ஆஸி. ஓபன் கோப்பையை முத்தமிட்டார்.
- இப்போட்டி 2 மணி, 56 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலமாக, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை சமன் செய்து (22 பட்டங்கள்) முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.
- மேலும், ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை ஜோகோவிச் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல் பரிசாக ரூ.16.5 கோடி வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த சிட்சிபாஸ் ரூ.9.25 கோடி பெற்றார்.
- அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் எடிஷன் இது. இந்தத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி இந்தத் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் என இந்த தொடர் நடைபெற்றது.
- இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு எட்டியிருந்தது இந்தியா.
- இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாது, பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
- இயற்கை தளங்கள், பாரம்பரிய கட்டிடங்களை அதன் வரலாற்று தனித்தன்மையுடன் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் சில இடங்களை பாரம்பரிய தலமாக அறிவிக்கும்.
- அதை எந்த சேதமும் ஆகாமல் பாதுகாப்பது மனித சமூகத்தின் கடமை என்று விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.
- இந்நிலையில் போர்களை தாண்டி ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள ஒடெசா துறைமுக நகரத்தை உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
- யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 21 உறுப்பு நாடுகளில் 6 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இரு நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் விலகிவிட்டது.
- ரஷ்யா இந்த தலத்தின் 'சிறந்த உலகளாவிய மதிப்பை' அங்கீகரிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தவும் வாக்குபதிவை தவிர்க்கவும் பலமுறை முயற்சித்தது. ஆனால் இறுதியில் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் இந்த இடத்தை பாதுகாக்க உக்ரைன் வலுவூட்டப்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை சர்வதேச அளவில் பெற முடியும் என்று யுனெஸ்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
- கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக்காக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கைபேசி செயலியை (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் விளையாட்டுப் போட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்தச் செயலி மூலம் எளிதில் பெற முடியும்.
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளுக்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்தச் செயலி வீரர்களுக்கான ஒரு பிரத்யேக உள்நுழைவு அம்சத்தைக் கொண்டுள்ளது.
- வீரர்கள் பதிவுசெய்த நேரத்திலிருந்து, முழுமையாக அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. போட்டி தொடங்கும் முன், வீரர்களின் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்தச் செயலி வாய்ப்பளிக்கிறது. இது விளையாட்டு வீரர்களுக்கு பதிவு செய்யும் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.
- வீரர் அல்லது வீராங்கனை விளையாட்டுகளுக்குப் பதிவு செய்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களுக்கு வரும்போது, தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலை, வீரர்கள் தங்க வேண்டிய தங்குமிடம், விளையாட்டு வீரர்களுக்கான போக்குவரத்துத் திட்டம் ஆகியவற்றை இச்செயலியில் சரிபார்க்கலாம்.
- அத்துடன் விளையாட்டு வீரர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான தொடர்பு எண்களும் இதில் உள்ளன. மேலும், விளையாட்டுகளின் போது விளையாட்டு வீரர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, வாட்ஸ் அப் சாட்போட் (Whatsapp Chatbot) உருவாக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டு ரசிகர்களுக்கு, இந்தச் செயலி, போட்டி அட்டவணைகள், பதக்க எண்ணிக்கை, விளையாட்டு அரங்குகளின் முகவரி மற்றும் புகைப்படத் தொகுப்புகள் போன்ற தகவல்களை வழங்குகிறது.
- இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.