Type Here to Get Search Results !

TNPSC 10th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

ஹிமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் தேர்வு

  • மலை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியான பா.ஜ., 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சிம்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் சுக்லா, பூபேஷ் பாகேல், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
  • ஹிமாச்சல் மாநில தேர்தல் பிரசார குழு தலைவரும், ராகுலின் தீவிர விசுவாசியுமான சுக்விந்தர் சிங், கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
  • ஹிமாச்சலின் அடுத்த முதல்வராக சுக்விந்தர் சிங் பதவியேற்க உள்ளார். மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். 
அமெரிக்காவில் சர்வதேச பதிப்பக குழுமமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் சிஇஓவாக நிஹார் மாளவியா நியமனம்
  • அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பதிப்பக குழுமமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
  • இந்நிறுவனத்தின் புதிய தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியான நிஹார் மாளவியா (48) நியமிக்கப்பட்டுள்ளார். 
  • தற்போதைய சிஇஓ மார்கஸ் டோஹ்லே இம்மாத இறுதியில் பதவி விலகுவதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 1ம் தேதி நிஹார் மாளவியா பதவி ஏற்க உள்ளார். 
  • மாளவியா கடந்த 2019ம் ஆண்டு முதல் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளையின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியுமாக பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் முதல்வராக பாஜகவின் பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு
  • 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பாஜக 156 இடங்களில் வெற்றிபெற்று 7வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் சட்டமன்ற பாஜக தலைவராக, பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கவுள்ளார். 
ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
  • வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.  இந்தியா-வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. 
  • இன்றைய போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 210 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் கைகோர்த்து அபாரமாக ஆடிய விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார்.
  • இதன்மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 72வது சதத்தை பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் (1,214 நாட்கள்) பிறகு விராட் கோலி சதமடித்துள்ளார்.
  • இன்று பதிவு செய்த சதத்தின்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 71 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். 100 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் அமன்
  • ஸ்பெயினில் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 9 பேர் பங்கேற்றனர். 
  • ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் பங்கேற்றார். 
  • அடுத்து நடந்த அரையிறுதியில் அமன், கிர்கிஸ்தானின் அல்மாசை சந்தித்தார். இதில் அமன் 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதில் துருக்கியின் துமானுடன் மோதினார். 
  • துவக்கத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்திய அமன், 12-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக மல்யுத்தம் 23 வயது பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் அமன்.
  • இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel