Type Here to Get Search Results !

TNPSC 4th NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

மீண்டும் இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு

  • மேற்காசிய நாடான இஸ்ரேலில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கிறது. 
  • மொத்தமுள்ள 120 இடங்களில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 
  • இதையடுத்து, 1996 - 99, 2009 - 21 என இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். 
தைவானுடன் தொழில் வர்த்தக ஒப்பந்தம்
  • கோவையில் பசுமை தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில், தைவானுடன் தேசிய உற்பத்தி குழு மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
  • இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ஸ்ரீராமுலு, செயலாளர் அண்ணாமலை மற்றும் தைவான் நாட்டின் எட்டு பேர் கொண்ட வல்லுனர் குழுவினர் பங்கேற்றனர்.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2022 - இந்திய ஆடவா் சாம்பியன்
  • தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவா் அணி வெள்ளிக்கிழமை வாகை சூடியது. 
  • இப்போட்டியில் இதற்கு முன் இரு முறை வெள்ளி வென்ற இந்தியா, தங்கம் வெல்வது இது முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில், சௌரவ் கோஷல், ரமீத் டாண்டன், அபய் சிங் அடங்கிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. 
  • அந்த ஆட்டத்தில் முதலில் ரமீத் 11-5, 11-7, 11-4 என்ற கணக்கில் அலி அராமெஸியை வீழ்த்த, அடுத்த ஆட்டத்தில் சௌரவ் 11-9, 11-2, 11-3 என்ற கணக்கில் அமா் அல்டாமிமியை தோற்கடித்தாா். 
இந்தியா - சிங்கப்பூர் இடையே 11வது கூட்டு விமானப்படை போர்ப்பயிற்சி 2022

  • இந்திய விமானப்படைக்கும், சிங்கப்பூர் விமானப்படைக்கும் இடையேயான 11வது கூட்டு போர்ப்பயிற்சி கலைக்குந்தாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நவம்பர் 3ம் தேதி தொடங்கியது. 
  • இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரு நாட்டு விமானப்படைகளும் நவீன விமான சாகச பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.
  • இதில் இந்திய விமானப்படையின் எஸ்யு - 30 எம்கேஐ, ஜாக்குவார், எம்ஐஜி-29, இலகு ரக தேஜாஸ் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்கின்றன.  சிங்கப்பூர் விமானப்படை சார்பில் எப்-16, விமானம் பங்கேற்றுள்ளது.
தேசிய எஸ்சி - எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்பு குழுவின் (HPMC) 5வது கூட்டம் 
  • தேசிய எஸ்சி-எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்புக் குழுவின்ன் (எச்பிஎம்சி) 5வது கூட்டம் மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர்  திரு நாராயண் ரானே தலைமையில் நடைபெற்றது. 
  • இணை அமைச்சர் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை இணை திரு பானு பிரதாப் சிங் வர்மா இணைந்து பங்கேற்ற இந்தக் கூட்டம் 3 நவம்பர் 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே தலைமை வகித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel