Type Here to Get Search Results !

TNPSC 21st NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணி

  • விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. 
  • முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
  • ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
  • இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
  • உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
  • தமிழகம் எடுத்த 506 ரன், லிஸ்ட் ஏ தொடரில் ஒரு அணியி அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 498 ரன் குவித்து படைத்த சாதனை நேற்று தகர்க்கப்பட்டது.
  • விஜய் ஹசாரே தொடரில் கடந்த ஆண்டு மும்பை அணி புதுச்சேரிக்கு எதிராக 457 ரன் குவித்த சாதனையும் முறியடிக்கப்பட்டது. 
  • லிஸ்ட் ஏ ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை ஜெகதீசன் (277) வசமானது. முன்னதாக, 2002ல் கிளமார்கன் அணிக்கு எதிராக சர்ரே அணியின் அலிஸ்டர் பிரவுன் 268 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
  •  உலக அளவில் லிஸ்ட் ஏ ஒருநாள் ஆட்டத்தில் 435 ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, சாமர்செட் அணி 1990ல் டெவோன் அணிக்கு எதிராக 346 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
  • விஜய் ஹசாரே தொடரின் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையும் ஜெகதீசன் வசமானது (15 சிக்சர்). இதற்கு முன் 2019-20 தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்சர் விளாசி இருந்தார்.
வாரத்தில் 3 நாட்கள் முட்டை, பிஸ்கட் - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
  • கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தவதற்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
  • மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நடைபெற்ற இந்த 2வது ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கிராமப்புற வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 
  • கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார். அங்கன்வாடி மையங்களில் 1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • மேலும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய இலவச அரிசி வழங்குவதால் பட்டினியின்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நியாய விலைக்கடைகளின் தரத்தை உயர்த்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  • உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், முததல் 8 இடங்களில் உள்ள ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலி நாட்டில் உள்ள துரின் நகரில் நடந்ததது. இதன் இறுதிப் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச், நார்வேயின் கார்ஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
    • இன்றைய முதல் செட்டில், 7-5, இரண்டாவது செட்டில் 6-3, என்று அதிரடி காட்டிய ஜொகோவவிச் இப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
    • ஜோகோவிச் 7 ஆண்டிற்குப் பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்றதார். இதன் மூலம் இவர் 6 வது முறையாக அவர் இப்படத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் வென்றதன் மூலம் அவருக்கு ரூ.39 கோடி பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
    19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு 
    • 19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு, பனாமாவின் செனிக் நகரத்தில் நவம்பர் (2022) 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • 10 கிலோ கிராம் எடையிலான ரோஸ்வுட் மரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அழிந்து வரும் இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின்  அனுமதி தேவைப்படுகிறது. 
    • இந்தக் கட்டுப்பாடு காரணமாக இந்தியாவின் ரோஸ்வுட் மரத்தால் தயாரிக்கப்படும் அறைகலன் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 
    • இதன் காரணமாக ரோஸ்வுட் பொருட்களின் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 50,000 கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில், ரோஸ்வுட் பொருட்களின் ஏற்றுமதியின் அளவை அதிகரிப்பது குறித்து இந்தியா பரிந்துரைத்தது. 
    • இந்திய பிரதிநிதிகள் அளித்த நீண்ட விளக்கங்களுக்கு பிறகு 10 கிலோ கிராமுக்கு குறைவாக எடை கொண்ட ஒவ்வொரு  ரோஸ்வுட் மரத்தாலான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. 
    • மேலும், மரத்தாலான பொருட்கள் மட்டுமே, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இரும்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள், இதில் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    • இந்த நடவடிக்கை இந்திய கைவினைஞர்களுக்கும் அறைகலன் தொழில்துறைக்கும் பெரிய நிவாரணமாக உள்ளது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel