Type Here to Get Search Results !

TNPSC 7th OCTOBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

36வது தேசிய விளையாட்டுப் போட்டி - 6வது நாள்
  • தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
  • ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய் கிருஷ்ணா, சக்தி, மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா கூட்டணி வெண்கலப் பதக்கம் பெற்றது. 
  • இதையடுத்து, பதக்கப்பட்டியலில் வெள்ளிக்கிழமை முடிவில் தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. 
  • சா்வீசஸ் 42 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஹரியாணா 29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், மகாராஷ்டிரம் 26 தங்கம், 26 வெள்ளி, 48 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து - ஆய்வு செய்ய மூவர் ஆணையம் அமைப்பு
  • இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
  • இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும், இவற்றைத் தவிர மற்ற மதத்தை பின்பற்றுவோர் பட்டியலினத்தவராக கருத்தப்பட மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. 
  • ஆனால், தங்கள் மதத்துக்கு மாறிய பட்டியலின மக்களுக்கும், அவர்களுக்கான சலுகைகள் வழங்க வேண்டும் என முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மத அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
  • இதையடுத்து, வரலாற்று ரீதியாக பட்டியலினத்தை சேர்ந்த மதம் மாறியவர்களுக்கு அதற்கான அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் பல்கலை மானியக்குழு உறுப்பினர் பேராசிரியை சுஷ்மா யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தானில் முதலீட்டாளர்கள் மாநாடு - அசோக் கெலாட் துவக்கி வைப்பு
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி வளாகத்தில் அக்.,7, 8 முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் துவக்கி வைத்தார். 
  • இந்த உச்சி மாநாட்டில் ரூ.10.44 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் உலகின் 3வது பணக்காரரும், இந்திய தொழிலதிபருமான கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel