Type Here to Get Search Results !

TNPSC 15th OCTOBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி 7வது முறையாக இந்திய அணி சாம்பியன்

  • மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய 7 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதின.
  • லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
  • இந்த நிலையில் மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியான இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 
  • இதனால் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். 
  • இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
உலகின் பசுமை நகரம் ஹைதராபாதுக்கு விருது
  • கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள ஜெசு நகரில், சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், இந்தாண்டுக்கான உலகின் பசுமையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. 
  • இவற்றில், நம் நாட்டின் தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத், 'உலகின் பசுமை நகரம்' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், 'பொருளாதார மீட்சி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பசுமை வாழ்வியல்' என்ற பிரிவிலும், ஹைதராபாத் நகரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • ஆறு பிரிவுகளில் ஹைதராபாதுக்கு விருது கிடைத்துள்ளதாக, சர்வதேச தோட்டக்கலை அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு, இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நகரம் ஹைதராபாத் மட்டுமே.
அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மாநாடு 2022
  • அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 
அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
  • அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் சர்வதேச நிதியம் மற்றும் நிதிக்குழுவின் கூட்டத்தில் நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று கலந்து கொண்டார்.
  • மிகப்பெரிய பொருளாதாரங்களில் வளர்ச்சி குறைவு, புவி அரசியல் சூழலால் ஏற்பட்டுள்ள எல்லை தாண்டிய தாக்கங்கள், உணவு மற்றும் எரிசக்தி விலையேற்றத்தால் நிகழ்ந்த பணவீக்க அழுத்தம் உட்பட சர்வதேச பொருளாதாரம் முக்கிய இடர்பாடுகளால் சிக்கியுள்ள சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel