Type Here to Get Search Results !

TNPSC 26th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஜூலியர் பேர் கோப்பை - அர்ஜூன் எரிகைசியை வென்று சாம்பியன் ஆனார் கார்ல்சன்

  • இணையதளம் வாயிலாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டங்கள் இரு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தார். 
  • இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்தாலே கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற சூழ்நிலையே இருந்தது.
  • எனினும் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களை வென்று அசத்தினார் கார்ல்சன். முதல் ஆட்டத்தில் 48-வது நகர்த்தலின் போதும், 2-வது ஆட்டத்தில் 52-வது நகர்த்தலின் போது அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார் கார்ல்சன்.
  • ஜூலியர் பேர் கோப்பைக்கான செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி பட்டம் வென்றார்.
புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்தார் திரவுபதி முர்மு
  • கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது தசரா விழாவை கொண்டாட தொடங்கினர்.
  • நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. 
  • கடந்த 2 ஆண்டுகளாக க‌ரோனா தொற்றின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்ட தசரா விழா, இந்த ஆண்டு ஆடம்பரமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் 412வது மைசூரு தசரா விழாவை குடியரசுச் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். 
  • இந்நிகழ்வில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை தமிழக அமைச்சரவை ஒப்புதல்
  • ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
  • இக்குழு, ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவை பார்வைக்கு வைக்கப்பட்டது.அதன்பின், பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு; பொது மக்களிடம் இ - மெயில் வழியே பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன. 
  • அவற்றின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இது, ஆக., 29ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அவசர சட்டத்தை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
  • அதன்படி, செம்மைப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 
இத்தாலி பிரதமராக மெலோனி தேர்வு
  • இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பிரதமர் மரியோ டிராகி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 
  • இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி 26 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. 
  • அதன் கூட்டணி கட்சிகளான, மேத்யூ சால்வினி தலைமையிலான லீக் கட்சி 9 சதவீதம், சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான போர்ஜா இத்தாலியா கட்சி 8 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. 
  • தீவிர வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளதால், அவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு
  • ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. 
  • இந்த நிலையில் அகழாய்வு பணியில் மேலும் அதிசயமாக வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள்
ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் முதன்முறையாக இந்திய கடற்படை கப்பல் பங்கேற்பு
  • ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் தெற்கு தயார்நிலை செயல்திட்ட வருடாந்திர பயிற்சியில் பங்கேற்பதற்காக ஐ.என்.எஸ் சுனைனா கப்பல் செப்டம்பர் 24 அன்று செஷல்சின் விக்டோரியா துறைமுகத்தை சென்றடைந்தது. 
  • இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தப் பங்கேற்பு மீண்டும் வலியுறுத்தும். ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பம்சம்.
  • ஒருங்கிணைந்த கடல்சார் படைகளால் நடத்தப்படும் திறன் கட்டமைப்பு பயிற்சிகளில் சக கூட்டாளியாக இந்தக் கப்பல் கலந்து கொள்ளவிருக்கிறது. 
  • அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிக் குழுவுடன் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இந்தக் கூட்டு பயிற்சியில் பங்கேற்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel