Type Here to Get Search Results !

TNPSC 11th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியாவின் மிகச்சிறந்த பூங்கா விருது பெற்ற வண்டலூர் பூங்கா

  • சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த உயிரியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
  • சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த உயிரியல் பூங்காவில் தற்போது புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' அமைந்துள்ள நிலையில், சிறந்த பூங்கா எனும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது பூங்காவுக்கு புதுப்பொலிவை அளித்துள்ளது.
ஆசிய கோப்பை - 6-வது முறையாக வெற்றியை ருசித்த இலங்கை
  • 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. 
  • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
  • அந்த அணியில் சிறப்பாக விளையாடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
  • இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. ஆனால் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.
  • பின்னர் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
  • 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி தற்போது ஆசிய கோப்பை வென்றது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்

  • நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ். அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடி இருந்தார். 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியை அவர் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • 1973 முதல் இதுவரையிலான ATP தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மிக இளம் வயது வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளார் கார்லோஸ் அல்கராஸ். கடந்த 2020 முதல் நடால், ஜோகோவிச், மெத்வதேவ் மற்றும் அல்கராஸ் ஆகியோர் டென்னிஸ் ரேங்கிங் பிரிவில் முதலிடத்தில் இருந்துள்ளனர்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் முதல் முறையாக ஸ்வியாடெக் சாம்பியன்
  • யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (28 வயது, 5வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து), அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
  • 2வது செட்டில் ஜெபர் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த நிலையில், ஸ்வியாடெக் 6-2, 7-6 (7-5) என நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 51 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 
  • யுஎஸ் ஓபனில் ஸ்வியாடெக் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார். நடப்பு சீசனில் இது அவர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். பிரெஞ்ச் ஓபனில் 2 முறை (2020, 2022), யுஎஸ் ஓபன் (2022) என மொத்தம் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை இகா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel