Type Here to Get Search Results !

தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது (அ) திருவள்ளுவா் திருநாள் விருது / Tamil Nadu Government Chitrait Tamilputhandu Award (or) Thiruvalluu Thirunal Award



சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்

  • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்க ஓவ்வொரு ஆண்டும் 71 விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது

  1. கபிலர் விருது - முனைவர் அ.லலிதா சுந்தரம்
  2. உ.வே.சா. விருது - மருது அழகு ராஜா
  3. கம்பர் விருது - முனைவர் செ.வை. சண்முகம்
  4. சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையன்
  5. ஜி.யு.போப் விருது - ஜெ. நாராயணசாமி
  6. உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு.முகம்மதலி

2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது

  1. கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
  2. உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
  3. கம்பர் விருது - கோ.செல்வம்
  4. சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன்
  5. ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)
  6. உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர்
  7. இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்

2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலக தமிழ்ச் சங்க விருதுகள் 

  1. இலக்கிய விருது - 2016 நா.ஆண்டியப்பன்சிங்கப்பூர். 
  2. இலக்கண விருது - 2016 பெஞ்சமின் லெபோபிரான்ஸ். 
  3. மொழியியல் விருது - 2016 முனைவர் சுபாஷினிஜெர்மனி. 
  4. இலக்கிய விருது - 2017 முனைவர் சயதிரிகா சுப்ரமணியன்ஆஸ்திரேலியா. 
  5. இலக்கண விருது - 2017 உல்ரிகே நிகோலசுஜெர்மனி. 
  6. மொழியியல் விருது - 2017 மகாதேவ ஐயர் செயராம சர்மாஆஸ்திரேலியா ஆகியவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது

  1. 2017-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது - பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
  2. கபிலர் விருது - முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியனுக்கும்,
  3. உ.வே.சா விருது - ச.கிருஷ்ணமூர்த்திக்கும்,
  4. கம்பர் விருது - சுகி.சிவத்துக்கும்சொல்லின் செல்வர் விருது - முனைவர் வைகைச்செல்வனுக்கும்,
  5. ஜி.யு.போப் விருது - கோ.ராஜேஸ்வரி கோதண்டம்,
  6. உமறுப்புலவர் விருது - ஹாஜி எம்.முகமது யூசுபுக்கும்,
  7. இளங்கோவடிகள் விருது - முனைவர் வெ.நல்லதம்பிக்கும்,
  8. அம்மா இலக்கிய விருது - முனைவர் மீ.சு.ஸ்ரீலட்சுமி
  9. 2016-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது அல்டிமேட் மென்பொருள் தீர்வகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2017-ம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பாளர் விருதுகள்

  • நெல்லை சு.முத்துதி.வ.தெய்வசிகாமணிஆ.செல்வராசு (எ) குறிஞ்சிவேலன்முனைவர் ஆனைவாரி ஆனயதன்மறவன் புலவு க.சச்சிதானந்தன்வசயதா சியாமளம்முனைவர் இரா.கு.ஆல்துரைபேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன்ஆண்டாள் பிரியதர்ஷினிமுனைவர் தர்லோசன் சிங் பேடி ஆகிய பத்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது

  • தமிழ்த்தாய் விருது புவனேசுவரம் தமிழ்ச் சங்கத்துக்கும், கபிலர் விருது மி.காசுமானுக்கும், உ.வே.சா.விருது நடன காசிநாதனுக்கும், கம்பர் விருது க.முருகேசனுக்கும் அளிக்கப்படும். 
  • சிலம்பொலி செல்லப்பன்: சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமாருக்கும், ஜி.யு.போப் விருது கோ.சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது நசீமா பானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் அளிக்கப்படும்.
  • கவிஞர் வைரமுத்து மகன்: முதலமைச்சர் கணினி தமிழ் விருது வை.மதன் கார்க்கிக்கு (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை) அளிக்கப்படும். இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது ரூ.5 லட்சத்துடன் பாராட்டுக் கேடயம், சான்றிதழ் அடங்கியதாகும். மற்ற விருதுகள் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், பொன்னாடை மற்றும் தகுதியுரை அடங்கியதாகும்.
  • சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள்: கடந்த ஆண்டுக்கான (2018) சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, அரிமா மு.சீனிவாசன், குப்புசாமி, மருத்துவர் அக்பர் கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செந்தில்குமார் என்ற கிரிதாரிதாஸ், பழனி அரங்கசாமி, எஸ்.சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கும் அளிக்கப்பட உள்ளன. இந்த விருது ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியதாகும்.
  • 2018-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டின் ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தத்துக்கும் அளிக்கப்படும். இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை அளிக்கப்படும்.
  • தமிழ்ச் செம்மல் விருது: மாவட்டங்களில் தமிழ்ப் பணி ஆற்றி வருவோருக்காக 32 மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு விருதுகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, யு.எஸ்.எஸ்.ஆர்.கோ.நடராஜன் (சென்னை), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), இதயகீதம் ராமானுஜம் (காஞ்சிபுரம்), சிவராஜி (வேலூர்), கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி), சம்பந்தம் (திருவண்ணாமலை), செ.வ.மதிவாணன் (விழுப்புரம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர்), அ.ஆறுமுகம் (அரியலூர்), ஆ.கணபதி (சேலம்), பொ.பொன்னுரங்கன் (தருமபுரி), முனைவர் சி.தியாகராசன் (நாமக்கல்), வெ.திருமூர்த்தி (ஈரோடு), கவிமாமணி வெ.கருவைவேணு (கரூர்), முனைவர் மா.நடராசன் (கோவை), மு.தண்டபாணிசிவம் (திருப்பூர்), கோ.கந்தசாமி (நீலகிரி), வீ.கோவிந்தசாமி (திருச்சி), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோடை), முனைவர் சே.குமரப்பன் (சிவகங்கை), த.உடையார்கோயில் (தஞ்சாவூர்), நா.சக்திமைந்தன் (திருவாரூர்), மு.மணிமேகலை (நாகப்பட்டினம்), சுப்பையா (ராமநாதபுரம்), இலக்குமணசுவாமி (மதுரை), வதிலைபிரபா (திண்டுக்கல்), சு.குப்புசாமி (தேனி), க.அழகர் (விருதுநகர்), பே.ராஜேந்திரன் (திருநெல்வேலி), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி).

2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்

  • 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
  • கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்
  • உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்
  • கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்
  • சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
  • மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
  • முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
  • அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
  • மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
  • இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
  • உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
  • மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
  • சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
  • அயோத்திதாஸப் பண்டிதர் விருது - பிரபாகரன்
  • ஜி.யு. போப் விருது - மரிய ஜோசப் சேவியர்

2020-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்

  • 2020-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளா்களின் பெயரைத் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
  • அரசின் பரிசீலனைக்குப் பிறகு, குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கான விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சாா்பில் நடைபெறும் திருவள்ளுவா் திருநாள் விழாவில், விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
  • திருவள்ளுவர் விருது 2020 - ந. நித்தியானந்த பாரதி
  • பேரறிஞர் அண்ணா விருது 2019 - முனைவர் கோ.சமரசம்
  • பெருந்தலைவர் காமராசர் விருது 2019 - முனைவர் மா.சு.மதிவாணன்
  • மகாகவி பாரதியார் விருது 2019 - முனைவர் ப.சிவராஜி
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது 2019 - த.தேனிசை செல்லப்பா
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 2019 - முனைவர் சே.சுந்தரராசன்
  • முத்தமிழ்க் காவலர் மருத்துவர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - மணிமேகலை கண்ணன்

2021-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்

  • பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
  • மகாகவி பாரதியார் விருது - பாரதிகிருஷ்ணகுமார் 
  • பாவேந்தர் பாரதி தாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன் 
  • சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
  • சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம் 
  • அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - சஞ்சீவிராயர்
  • தேவநேயப்பாவாணர் விருது - அரசேந்திரன் 
  • உமறுப்புலவர் விருது - மம்மது 
  • கி.ஆ.பெ., விருது - ராஜேந்திரன் 
  • கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
  • ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் 
  • மறைமலையடிகள் விருது - சுகிசிவம் 
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது - அலாய்சியஸ் 
  • தமிழ்த்தாய் விருது - மலேஷிய தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ்
  • இவ்வாண்டு முதல், விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 
  • அத்துடன், 1 சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.

திருவள்ளுவா் திருநாள் விருதுகள் (தமிழ் வளர்ச்சி விருதுகள்) 2022 & 2023 / THIRUVALLUVAR THIRUNAL AWARDS (TAMIL VALARCHI VIRUTHUKAL) 2022 & 2023

  • 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகள் வழங்குகிறார்.
  • விருது பெறுவோர்
  • திருவள்ளுவர் விருது - இரணியன் நா.கு.பொன்னுசாமி
  • பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா
  • பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
  • மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்
  • திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி
  • கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா
  • பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்
  • அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை
  • தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருது / TAMILNADU GOVERNMENT AWARD 2023

  • தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து கவுரவித்து வருகிறது. 
  • அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்துக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோரை கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ. பலராமனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று கலைஞர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவரும், தமது 92ஆவது வயதிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும், தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும்.

விருதுபெருவோர் பட்டியல்

  • திருவள்ளுவர் விருது - தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி
  • பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம்
  • பெருந்தலைவர் காமராசர் விருது – உ.பலராமன்
  • மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி

2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார், அம்பேத்கர் விருதுகள் / Periyar Awards 2023 & Ambedkar Awards 2023

  • தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான 'தந்தை பெரியார் விருதினை' வழங்கி கௌரவித்து வருகிறது.
  • அந்தவகையில் 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான 'தந்தை பெரியார் விருது'-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அதே போன்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. 
  • அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான 'டாக்டர் அம்பேத்கர் விருது'-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.
  • சமூகநீதிக்கான 'தந்தை பெரியார் விருது' பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம். தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டுதிராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.
  • தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர், கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டவர் தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
  • 'டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது' பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி. சண்முகம் , தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.
  • மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார். வாச்சாத்தி உண்மையின் போர்க்குரல், வாச்சாத்தி வன்கொடுமை போராட்டம் வழக்கு தீர்ப்பு, தீக்கதிர் நாளிதழில் வனமக்கள் வாழ்க்கை வளம்பெற - வனங்களை பாதுகாப்பது மக்களே போன்ற செய்தி தொகுப்புகளையும் . சண்முகம் எழுதியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel