28000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியா
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (Defense Acquisition Council) கூட்டத்தில் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஆயுதப்படைகளுக்கு ரூ.28 ஆயிரத்து 732 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் ஸ்வர்ம் ட்ரோன்கள் மற்றும் க்ளோஸ் கால் கார்பைன்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பிற ஆயுதங்களும் அடங்கும். இந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும்.
- மொத்தம் ரூ.28732 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மட்டுமின்றி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மிகவும் தேவையான 4 லட்சம் கார்பைன்களும் ராணுவத்துக்கு வாங்கப்படும். இதுதவிர புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளுக்கான 14 விரைவு ரோந்து படகுகள், கடலோர காவல்படை ஆகியவையும் வாங்கப்படும்.
- இந்திய கடற்படையின் பலத்தை வலுப்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடற்படைக்கு 1,250-கிலோவாட் திறன் கொண்ட மேம்பட்ட கடல் எரிவாயு டர்பைன் ஜெனரேட்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஜெனரேட்டர்கள் இந்திய கடற்படையின் கொல்கத்தா கிளாஸ் கப்பல்களில் நிறுவப்படும். இதன் மூலம் கடலில் செயல்படும் போதும் எளிதாக மின்சாரம் தயாரிக்க முடியும்.
தமிழக காவல்துறையில் புதிய சீருடை 'லோகோ' அறிமுகம் - காவலர் முதல் டிஜிபி வரை ஒரே அடையாளம்
- தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படைத் தகுதிகளுக்கு ஏற்ப சீருடை அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.
- அதன்படி, டிஜிபியின் தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம், காலரில் ரிப்பன் இருக்கும்.
- கூடுதல் டிஜிபியின் சீருடையில், தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் இருக்கும்.
- இதேபோல, காவல் ஆய்வாளர்கள் சீருடையின் தோள்பட்டையில் டி.பி. (தமிழ்நாடு போலீஸ்), கயிறு, 3 ஸ்டார் இருக்கும். உதவி ஆய்வாளர்களுக்கு இரண்டு ஸ்டார், தலைமைக் காவலருக்கு 3 பட்டைகள் இருக்கும். இவ்வாறு, காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் டிஜிபி வரை, அனைத்துப் பிரிவு போலீஸாரின் நிலையைக் குறிக்கும் வகையில், சீருடை லோகோ அமைந்திருக்கும்.
- எனினும், ஒட்டுமொத்தமாக தமிழக காவல் துறை என்பதைக் குறிக்கும் வகையில், தமிழக போலீஸாரின் சீருடையில் எந்த அடையாளமும் இல்லை.
- எனவே, வட மாநிலங்களில் இருப்பதுபோல, மாநிலப் பெயரைக் குறிக்கும் வகையில், காவலர் சீருடையில் ஒரே மாதிரியான அடையாளம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
- இதற்கு உரிய தீர்வுகாணும் வகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழக காவல் துறையில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரை அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள 'லோகோ' இடம் பெற உள்ளது.
- அதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி உள்ளிட்டவற்றுடன், 'தமிழ்நாடு காவல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடுதலாக இந்த லோகோவும் இடம்பெறும்.
- அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த லோகோ, தமிழக போலீஸார் அனைவரின் சீருடையின் இடது கை பகுதியில் ஜொலிக்க உள்ளது.
- இந்த லோகோ வடிவமைப்பை, தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் செய்துள்ளார். ஏறத்தாழ 100 லோகோ-க்களுக்கு மேல் தயாரித்து, அவற்றை கூர்ந்து ஆராய்ந்து, அவற்றில் ஒன்றை தேர்வு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்திய பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையத்தை அமைக்க, ஆயுஷ் அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் முதல் உலக மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக மருத்துவ மையத்தை அமைப்பதற்கான பூமி பூஜை ஜாம் நகரில் நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்து கொண்டார். இந்த மையத்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவ மையத்தின் அனைத்து செலவுகளும் ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
- உலக சுகாதார அமைப்புக்கு தேவையான போதிய அலுவலக வளாகங்கள் போன்ற வசதிகளை மத்திய அரசு அளிக்கும். இந்த உலக சுகாதார பாரம்பரிய மருத்துவ மையம் உலகில் உள்ள அனைத்து பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆதரவை வழங்கும்.