Type Here to Get Search Results !

TNPSC 26th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF



உலக வில்வித்தையில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி

  • உலக வில்வித்தைப் போட்டிகள் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. வில்வித்தைப் போட்டியின் இறுதிச் சுற்றில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவும், சீன தைபே அணியும் மோதின.
  • இந்திய அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணி 5-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தூத்துக்குடியில் சிப்பெட் கல்வி மையம்

  • சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. 
  • இந்நிலையில், கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59.19 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. 
  • மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ம.பி. முதல் முறையாக சாம்பியன்
  • எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 
  • மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 536 ரன் குவித்தது. 2வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி 269 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 
  • இதையடுத்து, 108 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம், 29.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. 
  • ம.பி. அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டு சாதனை படைக்க, 41 முறை சாம்பியனான மும்பை அணி இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. 
  • ம.பி. வீரர் ஷுபம் ஷர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையின் சர்பராஸ் கான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். 
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார் ஜோ பைடன்
  • அமெரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், துப்பாக்கியால் சுட்டு கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 
  • இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதம் தொடங்கியது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 
  • இந்நிலையில், இது தொடர்பான மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவை சட்டமாக்கும் அரசாணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். 
  • இந்த சட்டத்தின்படி, பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வயதில் குறைந்தவர்களுக்கு துப்பாக்கிகளை விற்பதற்கு முன், அவர்களுடைய பின்புலத்தை விசாரிக்க வேண்டும். 
  • குடும்ப வன்முறையில் ஈடுபட்டோருக்கு துப்பாக்கி விற்க கூடாது. ஆபத்தானவர்கள் என்று கருதுவோருக்கு துப்பாக்கி விற்பனையை தடை செய்யும் சட்டங்களை அந்தந்த மாகாணங்கள் நிறைவேற்றி கொள்ள இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது. 
  • மேலும், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு மனரீதியிலான சிகிச்சை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
வங்கதேசத்தின் நீண்ட பாலம் திறந்து வைத்தார் பிரதமர் ஹசீனா
  • நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. 
  • மொத்தம் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6.15 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய உள்கட்டமைப்பு வசதியாக பார்க்கப்படுகிறது. 
  • இரண்டு அடுக்குகளை உடைய இந்த பாலத்தின் மேல் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் கீழ் பகுதியில் ரயில்களும் இயக்க முடியும். இந்தப் பாலத்துக்கான தூண் 400 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டுள்ளது. 
  • உலகிலேயே மிக ஆழத்தில் பாலத் தூண் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. பல்வேறு பொறியியல் சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel