Type Here to Get Search Results !

TNPSC 4th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வெளியுறவு செயலர் நியமனம்

  • மத்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார்.
  • இந்நிலையில், நேபாள துாதராக பதவி வகிக்கும் வினய் மோகன் குவாட்ரா,60, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இம்மாதம் 30ல் பொறுப்பேற்கிறார்.
  • கடந்த 1988ல் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்த வினய் மோகன், 2017 - 2020 வரை பிரான்சு நாட்டின் இந்திய துாதராக பதவி வகித்தார்.
  • வெளியுறவுப் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 2015 - 2017 வரை பிரதமர் அலுவலக இணைச் செயலராகவும் பணி புரிந்துள்ளார்.

குற்றவியல் நடைமுறை மசோதா - லோக்சபாவில் நிறைவேறியது

  • நாட்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, கடந்த வாரம் லோக்சபாவில் தாக்கலானது.
  • இதைத் தொடர்ந்து, எம்.பி.,க்களின் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இம்மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. 

ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎப்சி நிறுவனம்

  • 1991-ம் ஆண்டுக்கு பிறகு தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி முதலில் அனுமதி அளித்தது ஹெச்டிஎப்சி வங்கிக்குதான். 1994-ம் ஆண்டு முதல் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது.
  • முதலில் ஹெச்டிஎப்சியின் துணை நிறுவனங்களான ஹெச்டிஎப்சி ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹெச்டிஎப்சி உடன் இணைய இருக்கிறது. 
  • அதன் பிறகு, அடுத்தகட்டமாக ஹெச்டிஎப்சி நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. ஒருங்கிணைந்த ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி வசம் இருக்கும். 25 ஹெச்டிஎப்சி பங்குகள் இருந்தால் 42 ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ஒருங்கிணைந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சஷிதர் ஜெகதீசன் இருப்பார். தற்போது ஹெச்டிஎப்சியின் தலைவராக இருக்கும் கெகி மிஸ்திரி வங்கியின் இயக்குநர் குழுவில் இருப்பார்.

டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்

  • உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் . டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். 
  • இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பிற்கு அளித்த அறிக்கையில் டுவிட்டர் நிறுவனத்தின் 7 கோடியே 34 லட்சம் டுவிட்டர் பங்குகள் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மொத்தம் ரூ 233 கோடி ஒதுக்கீடு
  • தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடிக்கு 2021 மார்ச் 31 வரை ரூ 3.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15-வது நிதி ஆணையத்தின் (2020-21) பரிந்துரையின் படி சென்னைக்கு ரூ 181 கோடி, மதுரைக்கு ரூ 31 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 21 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • காற்று தர நிதியின் கீழ் சென்னைக்கு ரூ 91 கோடி, மதுரைக்கு ரூ 15 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 11 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 117 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel