Type Here to Get Search Results !

TNPSC 3rd APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நடப்பாண்டில் 3101 ரயில் பெட்டி தயாரித்து அசத்தியது ஐ.சி.எப்.,

  • சென்னையில் உள்ள ஐ.சி.எப். எனும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. மேலும் 'வந்தே பாரத்' ரயில் பெட்டி தயாரிப்பு திட்டத்தில் பெட்டிகள் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
  • ஐ.சி.எப்.பில் 2019 - 2020ல் 4238 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.கொரோனா ஊரடங்காலும் ரயில் பெட்டி தயாரிப்பு தளவாடங்கள் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாட்டாலும் 4166 பெட்டிகளே தயாரிக்க முடிந்தது. 
  • இதேநிலை தொடர்ந்ததால் 2020 -2021ம் ஆண்டில் 1954 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.இந்த நிலையில் 2021 - 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • தளவாடங்கள் உரிய காலத்தில் கிடைக்காததால் 3100 பெட்டிகள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 
  • தயாரிப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டனரயில்களில் நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் 'லிங் ஹாப்மென் புஸ்' என்கிற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருவதால் இப்பெட்டிகள் அதிகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 
  • இதையொட்டி நிர்ணயித்திருந்த இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைக்கப்பட்டுள்ளது.

7ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

  • உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள் மோதின . டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .
  • முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது . இதையடுத்து , 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது .
  • முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை . இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது . இறுதியில் , இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது .
  • இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது .

இலங்கை பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா

  • இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, உணவுப் பொருள்களுக்கு பற்றாக்குறை என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
  • அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 
  • இதையடுத்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சா்களும் தங்கள் பதவியை ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.
  • பிரதமா் மகிந்த ராஜபட்சவின் மகனும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபட்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பார்லி.,கலைப்பு

  • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது. 
  • இதையடுத்து, இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பார்லிமென்டை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் - இகா ஸ்வியாடெக் சாம்பியன்

  • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் போலந்தின் 20 வயதான இகாஸ்வியாடெக், ஜப்பானின் 24 வயதான நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்தினர்.
  • இதில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர் ஒசாகாவை ஒரு செட் பாயின்ட் கூட எடுக்கவிடவில்லை. அந்த செட் 6-0 என கைப்பற்றிய ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ச்சியாக இது அவர் பெற்ற 17வது வெற்றியாகும்.
  • மேலும் தோகா, இண்டியன் வெல்ஸ், மியாமி என தொடர்ச்சியாக 3 தொடர்களிலும் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் 2013ல் செரீனா தொடர்ச்சியாக 4 தொடரிலும், கரோலினா வோஸ்னியாகி 2010ல் 3 தொடரிலும் தொடர்ச்சியாக பட்டம் வென்றிருந்தனர். 

ஆர்லியன்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் வெள்ளி வென்றார்
  • பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். 
  • முதல் செட்டை 11-21 என இழந்த மிதுன், இரண்டாவது செட்டை 19-21 என போராடி கோட்டைவிட்டார்.மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மிதுன் மஞ்சநாத் 11-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்திய கடற்படையின் வருடாந்திர ரிபிட் மாநாடு
  • இந்திய கடற்படையின் வருடாந்திர ரீபிட் மாநாடு மற்றும் வருடாந்திர உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு 2022, கொச்சி தென்மண்டல கடற்படை தளத்தின் தளபதி வைஸ் அட்மிரல் எம்ஏ ஹம்பிபோலியால் மார்ச் 31-ந்தேதி தொடங்கிவைக்கப்பட்டது. 
  • அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப இந்த ஆண்டு மாநாடு உள்நாட்டு தயாரிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 
  • இந்த உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க பொதுத்துறை-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 
  • கடற்படை கப்பல்களை எந்தவித சவாலையும் சந்திக்கும் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும், கடற்படைக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது
இந்தியாவின் ஏற்றுமதி இலக்கை விஞ்சி, 2021-22-ல் 417.8 பில்லியன் டாலரை எட்டியது
  • இந்தியாவின் ஏற்றுமதி முடிவடைந்த நிதியாண்டில் 417.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் 40.38 பில்லியன் என்ற அதிக அளவாக இருந்தது. இருந்து முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 14.53% அதிகமாகும். 
  • 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 32.62% அதிகரித்து 352.76 பில்லியன் டாலராக இருந்தது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel