Type Here to Get Search Results !

TNPSC 3rd JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியாவில் வேலையின்மை விகிதம் உயர்வு - இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்
  • கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .
  • கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 7.9 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டில் தெரிய வந்துள்ளது.
  • இதனால், மீண்டும் வேலையின்மை விகிதம் உயர்ந்து வருகிறது. (கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.86% ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 7.91 % ஆக உயர்ந்துள்ளது)
  • கடந்த டிசம்பர் மாத கணக்கின் படி, இந்த வேலையின்மை பட்டியலில் 34.1 சதவிகிதத்துடன் ஹரியானா முதல் இடத்தில் உள்ளது. 27.1% பெற்று ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும், 17.3 % பெற்று ஜார்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 
  • 1.4 சதவிகிதத்துடன் கர்நாடகா கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6.9 % பெற்று தமிழ்நாடு 11ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதப் போா் கூடாது - 5 நாடுகள் கூட்டறிக்கை

  • அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடையிலும், பிற நாடுகள் மீதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்பது தலையாய கடமையாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 
  • அணு ஆயுத அச்சுறுத்தலை கவனத்தில் கொள்வது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஆயுதங்கள் இருப்பை குறைப்பது தொடா்பாக இருதரப்பு, முத்தரப்பு ஒப்பந்தங்களை 5 நாடுகளும் பின்பற்றும். அணு ஆயுதப் போரில் வெற்றிபெற முடியாது. அந்தப் போரில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா

  • வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சூடான் நாட்டில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஒமர் அல் - பஷீர்; இவர் 1989ல் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.
  • 30 ஆண்டுகளாக சூடான் அதிபராக அசைக்க முடியாத சர்வாதி காரியாக விளங்கினார். இந்நிலையில் 2019ல் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  • இதையடுத்து ராணுவத்தின் ஒத்துழைப்புடன் சூடான் பிரதமராக அப்துல்லா ஹம்டோக் பதவியேற்றார்.
  • இந்நிலையில் 2021 அக்டோபரில் மீண்டும் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இரும்புக் கரம் கொண்டு ராணுவம் அடக்க முற்பட்டது. 
  • உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்த ராணுவம் 2021 நவ., 21ல் மீண்டும் அப்துல்லா ஹம்டோக்கை பிரதமர் பதவியில் அமர்த்தியது. இது தொடர்பாக ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. 
  • எனினும் சூடானில் முழுமையான ஜனநாயக அரசு அமைய வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வந்தன. அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் பதவியை அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா செய்துள்ளார். 

15 முதல் 18 வயது நபர்களுக்கு தடுப்பூசி - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

  • தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 
  • தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய 33.20 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். 
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்
  • சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 3, 2022 அன்று தொடங்கி வைத்தார். 
  • முப்படைகளையும் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுக்கான ரூ.10 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel