Type Here to Get Search Results !

TNPSC 30th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்

  • மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம். மலைகள் நிறைந்த இந்த மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது. இம்மாநிலத்துக்கு கடந்த 6-ம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
  • இதன் ஒரு பகுதியாக, ஜிரிபம் முதல்இம்பால் வரையிலான 111 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் அமையும் இந்த ரயில் வழித்தடத்தில் 46 சுரங்கப்பாதைகள், 153 மேம்பாலங்கள் அமைகின்றன.
  • இந்த வழித்தடத்தில் உலகின் மிக உயரமான (141 மீட்டர்) ரயில்வே மேம்பாலம் நோனே மாவட்டத்தில் அமைகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியான ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்குதான் சரக்கு ரயில் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா சினியகோவா சாம்பியன்

  • ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா - கேதரினா சினியகோவா (முதல் ரேங்க்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
  • பைனலில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா - பீட்ரைஸ் ஹடாட் (பிரேசில்) ஜோடியுடன் மோதிய செக். இணை 6-7 (3-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. கோப்பையுடன் சினியகோவா - கிரெஜ்சிகோவா.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன்
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டானியல் மெட்வதேவை ஐந்தரை மணி நேரம் போராடி வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
  • 5 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்த இந்த மாரத்தான் போராட்டத்தில், நடால் 2-6, 6-7 (5-7), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி 2வது முறையாக ஆஸி. ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். ஏற்கனவே அவர் மெல்போர்னில் 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35% அதிகரிப்பு

  • கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 35% அதிகரித்து $ 6.1 பில்லியன் ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய இதே காலத்தில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது.
  • டிசம்பர் 2021-ல் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 720.51 அமெரிக்க டாலராக இருந்தது. 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில், இது 28.01% அதிகமாகும்.
  • இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா (44.5%), சீனா (15.3%), ஜப்பான் (6.2%) ஆகியவை உள்ளன. இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட எறால் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.
  • கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி கடந்த 2017-18-ம் ஆண்டில் 7.02 பில்லியன் டாலர் என்ற மிக அதிக அளவுக்கு நடைபெற்றிருந்தது. தற்போது, கொரோனா பரவலுக்கு இடையிலும், இந்த அதிக அளவை மிஞ்சி சாதனை படைக்கப்படும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதி ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

  • கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்படுவது வழக்கம்.
  • அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 
  • மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.133 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.532 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 800 என 2021-22 ஆம் ஆண்டிற்கு முதல் தவணை நிதியாக ரூ.665 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது. 
  • ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 2500 கிலோ மீட்டர் தூர அளவிலான சாலைகள் இந்த நிதியின் வாயிலாக மேம்படுத்தப்படும். மற்றும் இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel