- கொரோனா இரண்டாம் அலையால், இந்தியாவின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் (The Centre for Monitoring Indian Economy (CMIE)) அறிக்கை வெளியிட்டுள்ளது.
- கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையால் நாட்டில் 97% குடும்பங்கள் பொருளாதாரப் பிரச்னைகளை சந்தித்துள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் வேலையின்மை விகிதம் 8% அதிகரித்துள்ளதாகவும், இது மே மாதத்தில் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல்கள் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
- கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலே, அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் 10 கோடி பேர் வேலையை இழந்தனர்.
- தொழில்கள் முடங்கிடாத வகையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த மே மாதத்தில் மட்டும் நாடெங்கிலும் 1.5 கோடி பேருக்கு மேல் வேலையை இழந்திருப்பதாக சி.எம்.ஐ.இ அமைப்பு தெரிவிக்கிறது.
- இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 40.07 கோடி பேர் வேலையில் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மே மாத இறுதியில் 37.55 கோடியாகக் குறைந்துள்ளது.
- இது ஒரு பக்கம் இருக்க, புதிய வேலைவாய்ப்பு குறித்த நிலவரமும் மோசமாகவே உள்ளது. சுற்றுலாத் துறையில் புதிதாக ஆள் எடுப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 30% குறைந்துள்ளது.
- கல்வி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் 20% - 30% குறைவாகவும் தொலைத் தொடர்புத்துறை, வங்கிகள் சார்ந்த வேலைகளில் 10% - 20% வரையிலும் வேலைவாய்ப்புகள் குறைவாகவும் உள்ளன.
- சென்ற ஆண்டு முதல் அலையின்போது வேலையிழந்தவர்களில் பலர் இன்னும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் திணறி வருகின்றனர்.
- இந்தச் சூழலில், கொரோனா இரண்டாம் அலையில் ஏற்படத் தொடங்கியிருக்கும் வேலையிழப்பும் நிறுவனங்கள் புதிதாக ஆட்கள் எடுப்பதைக் குறைத்து வருவதும் நிலைமை இன்னும் மோசமாக்கும் என்றே இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் அறிக்கை / The Centre for Monitoring Indian Economy (CMIE) Report
June 03, 2021
0
Tags