Type Here to Get Search Results !

TNPSC 15th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு

  • போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் டாக்ஸியை வடிவமைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டது. அதற்காக 'தி இ-பிளேன் கம்பெனி' (The ePlane Company) என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவியது. இந்நிலையில், மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் பறக்கும் இ-டாக்ஸியை ஐஐடி வடிவமைத்துள்ளது.
  • சிறிய விமான வடிவிலான இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் இதில் 2 பேர் பயணிக்க முடியும். இந்த இ-டாக்ஸி சுமார் 200 கிலோ அளவிலான எடையை சுமந்தபடி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
  • இ-டாக்ஸி சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லதயாராகிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான கால்டாக்ஸியைவிட 2 மடங்குமட்டுமே வாடகை அதிகம் இருக்கும். 

ஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படை முழுமையாக வாபஸ் - அதிபர் பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • அமெரிக்காவில் கபந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றதில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
  • கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவகளில், ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்றாகும்.
  • ஆனால், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து விடும் என்ற காரணத்தால், குறிப்பிட்ட அளவு வீரர்களை மட்டுமே திரும்பப் பெற்றார். 2500 வீரர்கள் தொடர்ந்து ஆப்கானில் தங்கியுள்ளனர்.
  • இந்நிலையில், புதிய அதிபரான பைடன், அமெரிக்க வீரர்களை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

விண்வெளி அதிசயமான 'கருந்துளையின் மல்டி பேண்ட்' புகைப்படத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானிகள்

  • விண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்றான 'கருந்துளையின்' பல வளையங்கள்(மல்டி பேண்ட்)கொண்ட புகைப்படத்தை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். 
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா,பல வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் மர்ம முடிச்சாக இருந்து வந்து கருந்துளை(black hole)யினைக் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை முதல் முறையாக 2019ஆம் ஆண்டு வெளியிட்டது. 
  • இதனைத் தொடர்ந்து,சீன விஞ்ஞானிகள் கருந்துளையினைச் சுற்றி 'பல வளையங்கள்'(மல்டி பேண்ட்) இருக்கும் புகைப்படத்தினை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
  • இந்த புகைப்படத்தில்,கருந்துளையின் மையப் பகுதியானது கருப்பு நிறத்திலும்,அதனைச் சுற்றியுள்ள வளையமானது ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது.
  • மேலும், மஞ்சள் நிற வெப்பமான வாயுக்களும் இடம் பெற்றுள்ளன.இந்த கருந்துளையினை, சீனாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான 'தியான்மா' படம் பிடித்துள்ளது.
  • கருந்துளையானது,பூமியிலிருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும்,சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு பெரியதாகவும் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
‘ககன்யான்' திட்டம் இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்
  • இந்திய மண்ணிலிருந்து மனிதா்களை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. 
  • நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டான 2022-இல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் இத்திட்டத்தின் பணிகள் தாமதமடைந்துள்ளன.
  • இந்நிலையில், 'ககன்யான்' திட்டத்தில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தைப் பாா்வையிட்டாா். அதையடுத்து, ஜான் ஈவ் லெடிரியன், இஸ்ரோ தலைவா் சிவன் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அதன்படி, இந்திய விண்வெளி வீரா்களுக்கு பிரான்ஸில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பில் பணிபுரிபவா்களும் பிரான்ஸில் பயிற்சி பெறவுள்ளனா். திட்டம் தொடா்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், விண்வெளி வீரா்களுக்கான உணவு உள்ளிட்டவற்றைத் தயாா் செய்வதில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
  • கருவிகளைப் பயன்படுத்த அனுமதி: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் உள்ளிட்டவற்றை இந்திய விண்வெளி வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது. 
  • சா்வதேச விண்வெளி நிலையத்தில் பிரான்ஸ் சாா்பில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை இந்திய வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • பல்வேறு பாதுகாப்புக் கருவிகளும் இந்திய வீரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. விண்வெளி வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான பிரத்யேக மையத்தை பெங்களூரில் கட்டமைக்கவும் பிரான்ஸ் உதவி செய்யவுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel