Type Here to Get Search Results !

TNPSC 4th AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


'யுனிகார்ன் ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஒரு பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 7,500 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட நிறுவனங்கள், 'யுனிகார்ன்' நிறுவனங்கள் என அழைக்கப்படும்.
  • இத்தகைய அதிக மதிப்பு கொண்ட, 21 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாக, ஹுருன் குளோபல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மொத்தம், 21 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. மேலும், இது போன்ற, 40 நிறுவனங்களை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் துவக்கி இருக்கின்றனர். 
  • இந்த, 21 நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 73.2 பில்லியன் டாலர் அதாவது, 5.49 லட்சம் கோடி ரூபாய் ஆகும். யுனிகார்ன் நிறுவனங்கள் அதிகமிருக்கும் நாடுகளில், இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. 
  • அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில், இந்தியா இருக்கிறது. உலகளவில் மொத்தம், 586 யுனிகார்ன் நிறுவனங்கள், 29 நாடுகளில் உள்ள, 145 நகரங்களில் அமைந்துள்ளன.
  • இந்தியர்கள் துவக்கி இருக்கும், 61 யுனிகார்ன் நிறுவனங்களில், மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் உள்ளன. அதிலும் அதிகமாக, அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளன. 
  • வெளிநாடுகளில் இந்தியர்களால் துவக்கப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 7.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில், பின்டெக் ராபின்ஹூட் நிறுவனம், 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் முன்னிலை வகிக்கிறது.
  • இந்தியாவிலுள்ள, 21 நிறுவனங்களில், பேடிஎம், ஓயோ ரூம்ஸ், பைஜுஸ், ஓலா கேப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள், மின்னணு வர்த்தக துறையில் இயங்குகின்றன.
  • இந்தியாவில் அதிகபட்சமாக, பெங்களூருவில் மொத்தம், 8 நிறுவனங்கள் உள்ளன. யுனிகார்ன் மையமாக பெங்களூரு விளங்குகிறது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்தை அடைய, அமெரிக்காவில், 6.5 ஆண்டுகளும்; சீனாவில், 5.5 ஆண்டுகளும் ஆகின்றன. 
  • இதுவே, இந்தியாவில், 7 ஆண்டுகள் ஆகின்றன. சீனாவில் உள்ள யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இந்தியாவில், பத்தில் ஒரு பங்கு தான் உள்ளது.
  • சீனாவில் மொத்தம், 227 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இந்தியர்கள் வெளிநாடுகளில், 40 நிறுவனங்களை துவக்கி இருக்கும் நிலையில், சீனா, அந்நாட்டுக்கு வெளியே, 16 நிறுவனங்களை மட்டுமே துவக்கி இருக்கிறது.
  • இந்தியாவில் உள்ள, 11 யுனிகார்ன் நிறுவனங்களில், சீனாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள், அதிக முதலீடுகளை செய்துள்ளன. சீனாவை சேர்ந்த அலிபாபா, 5 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும்; டென்சென்ட், 3 நிறுவனங்களிலும்; டி.எஸ்.டி., குளோபல், 3 நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளன. 
  • ஜப்பானை சேர்ந்த, சாப்ட்பேங்க், 9 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த, டைகர் குளோபல், 5 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. 
  • டில்லி ஐ.ஐ.டி.,யில் இருந்து, அதிகளவிலான யுனிகார்ன் நிறுவனர்கள் உருவாகி இருக்கின்றனர். மொத்தம், 36 நிறுவனர்கள், டில்லி ஐ.ஐ.டி.,யிலிருந்து வந்தவர்கள் ஆவர். இந்திய யுனிகார்ன் நிறுவனர்களில், 104 பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை வெறும், 5 மட்டுமே.
ஜம்மு-காஷ்மீா் உயா்கல்வி நிறுவனங்களில் லடாக் மாணவா்களுக்கு 4% இடஒதுக்கீடு
  • மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து இரு யூனியன் பிரதேசங்களும் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின.
  • அதைத்தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, லடாக் யூனியன் பிரதேசத்தைச் சோந்த மாணவா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • 'லடாக்கில் தொழில்முறைக் கல்வி நிறுவனங்கள் இல்லாததால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள கல்லூரிகளில் லடாக் மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக பரிந்துரைகள் வழங்குவதற்கு மத்திய அரசு குழு அமைத்திருந்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் லடாக் மாணவா்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அந்தக் குழு பரிந்துரைத்திருந்தது.
  • அந்தப் பரிந்துரையை ஜம்மு-காஷ்மீா் தலைமைச் செயலா் பி.வி.ஆா்.சுப்ரமணியம் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் லடாக் மாணவா்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, லடாக் மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 35 இடங்களும், பொறியியல் கல்லூரிகளில் 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • மீதமுள்ள இடங்களில் ஜம்மு-காஷ்மீா் மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த இடஒதுக்கீட்டு முறையானது நடப்பு 2020-21-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும். இடஒதுக்கீடு தொடா்பாக லடாக் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றாா்.
அசாமிற்கு பிரத்யேக முழுநேர தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்
  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அசாம் மாநிலத்திற்கான 24 மணி நேர பிரத்யேக சேனலான தூர்தர்ஷன் அசாம் என்பதை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel