Type Here to Get Search Results !

TNPSC 29th AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வான் கண்காணிப்புக்கு 2 பால்கன் விமானங்கள்: இஸ்ரேலிடம் வாங்க மத்திய அரசு முடிவு
  • வான்பரப்பில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக இஸ்ரேல் தயாரிப்பான பால்கன் ரக கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 3 பால்கன் விமானங்கள் உள்ளன.
  • இவற்றில் உள்ள அதிநவீன தொழில்நுட்பமானது, வான்பரப்பில் நுழையும் எதிரி நாட்டு விமானங்களை சில விநாடிகளில் கண்டறிந்து எச்சரிக்கையை அனுப்பும். அதாவது 7 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் விமானங்களையும் துல்லியமாக அடையாளம் காணும் திறன் கொண்டது. இந்த பால்கன் விமானம் மணிக்கு 973 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம்.
  • தற்போது உலக நாடுகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு விமானங்களில் பால்கன் ரக விமானங்கள்தான் மிகவும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • இந்த விமானங்களை வாங்கஇஸ்ரேல் அதிகாரிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதற்கான, 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கின்னஸில் இடம் பிடித்த உலகின் மிக வயதான காதல் தம்பதி
  • தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வசித்து வரும், ஜூலியோ சீசர் மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயிண்டேரோ, 104, தம்பதியினர், உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 
  • இவர்களின் பெயர்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த தம்பதியினர், 1941ல், காதலித்து திருமணம் செய்துள்ளனர்.ஜூலியோ காதல் திருமணத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் கிடைக்கவில்லை. 
  • இருப்பினும் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு குயிண்டரோவை கரம்பிடித்தார். 79 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த காதல் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளனர்.
4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் - மத்திய அரசு அறிவிப்பு
  • கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
  • இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
  • இந்நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
  • அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். 
  • மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இதையடுத்து, 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • மேலும், வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினம்: காணொலி காட்சி வாயிலாக விளையாட்டு விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்
  • தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, தேசிய விளையாட்டு விருதுகளை காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்துள்ளார். 
  • ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். 
  • அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி மூலமாக தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருதுகளை வழங்கினார். 
  • விக்யான் பவனில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • இதேபோல் நாட்டின் பல்வேறு விளையாட்டு ஆணைய மையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற அனைத்து இடங்களிலும் சுகாதார அமைச்சத்தின் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. 
  • ரோகித் சர்மா, மாரியப்பன், மணிகா பத்ரா, வினேஷ் போகத், ராணி ஆகியோர் இந்த ஆண்டின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில், 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 
  • இவர்களில் ரோகித், வினேஷ் போகத் தவிர தவிர மற்ற மூவருக்கும் இன்று விருது வழங்கப்பட்டது. இஷாந்த் சர்மா, தீப்தி சர்மா, அடானு தாஸ், திவிஜ் சரண் உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 
  • தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்ச்சியானது கொரோனா அச்சம் காரணமாக முதல் முறையாக காணொலி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel