ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள்: பிரதமா் மோடி அறிவிப்பு
- கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
- இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோமையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும். இது தொடா்பான முழு விவரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பாா் என்றும் அவா் கூறினாா்.
- இது தவிர, புதிய வடிவில் 4-ஆவது கட்டமாக தேசிய பொது முடக்கம் தொடரும் என்றும், இது தொடா்பாக மே 18-ஆம் தேதிக்கு முன்பு முழு விவரமும் அறிவிக்கப்படும் என்று பிரதமா் கூறினாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: ஜெய்சங்கா் பங்கேற்பு
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு புதன்கிழமை காணொலி முறையில் நடைபெறுகிறது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கிறாா்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த மாநாட்டை மாஸ்கோவில் ஜூன் 9, 10 தேதிகளில்தான் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழ்நிலை கருதி, முன்னதாகவே நடைபெறவுள்ளது.
- இதில், கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் சா்வதேச, பிராந்திய விஷயங்கள் தொடா்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.
- சீனாவில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது ஷாங்காய் அமைப்பு நாடுகள் உதவிகளை அளித்தன. அதேபோல இப்போது அந்த நாடுகளுக்கு சீனா உதவும் என்றாா்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அமைப்பில் இணைந்தன.
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க சிஎம்ஆர் ஒப்புதல்
- கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு 4 முறையில் சிகிச்சை வழங்க ஐசிஎம்ஆர் பல்வேறு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இதன்படி ஆன்டி-வைரல் மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரைடு மருந்துகள், பிளாஸ்மா சிகிச்சை மற்றும் ரெம்டிசிவிர் முறையில் சிகிச்சை வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.
- இதில் பிளாஸ்மா சிகிச்சையை சோதனை முறையில் செயல்படுத்த சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரெம்டிசிவிர் முறையில் சிகிச்சை அளிக்க ஐசிஎம்ஆர் தமிழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் இணையதளம் தொடக்கம்
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ் (www.Champions.gov.in) இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும்.
- நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, தேசிய மற்றும் உலகளாவிய சாம்பியன்ஸ் என்ற நிலையை நோக்கிய நகர்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்துக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
- சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப்படுகிறது.
- சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும்.
- குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு
- ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்கு சிறப்பு மற்றும் தயாரிப்புகளின் பிரபலத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
- கடந்த 2013-ம் ஆண்டு இந்த இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கோரி பூம்புகார் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு டெல்லியில் ஏழு நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன்பாக வாதடப்பட்டு, இதன் தொடர்ச்சியாக பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு கடந்த 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
- தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையாகும், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் போன்றவற்றில் இந்த செடி வகை பெருமளவில் காணப்படுகிறது. இந்த செடியின் நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.
- இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படுகிறது.
- இத்தகைய நெட்டி மூலம் கோயில் அமைப்புகள், உருவ அமைப்புகள், இயற்கை காட்சிகள், கட்டிட அமைப்புகள் மற்றும் வாழ்த்து மடல்கள் அலங்கரிக்கப்படுகின்றன. நெட்டியில் செய்யப்படும் கலைப்பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்றே வெண்மையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
- இத்தகைய வேலைப்பாட்டின் சிறப்பாகத் திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என மட்டுமின்றி இயற்கை உருவ அமைப்புகள் உருவாக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்து உள்ளது.
- அரும்பாவூர் மரச் சிற்பம் - இதேபோல், பெரம்பலூரின் கைவினைஞர்களின் அரும்பாவூர் மரச் சிற்பங்கள் முதன்மையாக மரப் பதிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, மா, லிங்கம் மரம், இந்திய சாம்பல் மரம், ரோஸ்வுட், வேம்பு மரம் ஆகியவை சிற்பங்களை உருவாக்கப் பயன்படுகின்றன.
- திருச்சி-பெரம்பலூர் எல்லை மற்றும் தஞ்சாவூர்-கும்பகோணம் பெல்ட் வழியாக பச்சமலை மலைகளிலிருந்து கைவினைஞர்கள் முக்கியமாக மரத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளனர்.
- அரும்பாவூர் கோயில் கார் ஸ்தாபதிகளின் (சிலை தயாரிப்பாளர்கள்) முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், வில்லுபுரம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கூட கலை அம்சங்களைக் கொண்ட பல கோயில் கார்கள் காணப்படுகின்றன.
- ஒரு பிழையானது முழுத் துண்டையும் சேதப்படுத்தும் என்பதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஒரு மரத்தடியிலிருந்து செதுக்கப்பட்ட முழு வடிவமைப்பும் கைவினைப்பொருளின் தனித்துவமாகும்.