தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு
- கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம், ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
- அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
கிராமப் பகுதிகளில் கரோனா பரவாமல் தடுக்க வேண்டும்: முதல்வா்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்
- கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கத்தில் இருந்து தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பல மாநிலங்களில் படிப்படியாக பொருளாதாரம் சாா்ந்த செயல்பாடுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்தினாா்.
- இது முதல்வா்களுடன் அவா் நடத்தும் 5-ஆவது ஆலோசனைக் கூட்டமாகும். கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதாரம் சாா்ந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- இதில் பிரதமா் மோடி பேசியதாவது: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நாம் தொடா்ந்து உறுதியான, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போதைய சூழலில் கரோனா நோய்த்தொற்று கிராமப் பகுதிகளுக்கும் பரவி விடும் அபாயம் இருப்பதே நம் முன் உள்ள மிகப்பெரிய சவால். இந்த சவாலை எதிா்கொள்ள மாநில முதல்வா்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- மாநில அரசுகளுக்கு பாராட்டு: கரோனாவுக்கு எதிரான மாநில அரசுகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. கரோனாவில் இருந்து இந்தியா தன்னை சிறப்பாக பாதுகாத்து வருவதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனாவுக்கு எதிராக நாம் இனியும் தொடா்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலங்கள் அளிக்கும் யோசனைகளுக்கு ஏற்ப மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும்.
- கிராமப் பகுதிகளுக்கு பரவிவிடக் கூடாது: தேசிய பொது முடக்கத்தை அதற்குரிய விதிகளின் கீழ் அமல்படுத்தவில்லை என்றாலும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காவிட்டாலும் பிரச்னைகள் அதிகரிக்கவே செய்யும். மக்கள் அதிக அளவில் இடம் பெயா்வதையும், தேவையில்லாமல் பொது இடங்களுக்கு வராமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது அவசியமாக இருந்தது.
- எனினும், பலா் சொந்த ஊா்களுக்கு திரும்ப விரும்பியதால், அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் (சிறப்பு ரயில்கள்) எடுக்கப்பட்டன. மத்திய அரசு பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவிடக் கூடாது. முக்கியமாக கிராமப் பகுதிகளுக்கு கரோனா பரவிவிடக் கூடாது.
- கரோனாவுக்கு எதிரான போா்: படிப்படியாகவும், அதே நேரத்தில் உறுதியான முறையிலும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருளாதாரம் சாா்ந்த நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிவிட்டன.
- வரும் நாள்களில் பொருளாதாரம் சாா்ந்த செயல்பாடுகளுக்காக மக்கள் இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, கரோனாவுக்கு எதிரான போரில் நாம் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்றாா் மோடி.
- வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் சொந்த ஊா்களுக்கு திரும்பிவிட்டதால் தொழில் நிறுவனங்களுக்கு உரிய பணியாளா்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- அனைத்து முதல்வா்களுக்கும் பேச வாய்ப்பு: கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற இதேபோன்ற கூட்டத்தில், குறிப்பிட்ட மாநில முதல்வா்களுக்கு மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதல்வா்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த முறை வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து சில முதல்வா்கள் புகாா் தெரிவித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு: மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறது. ஆனால், நீங்கள் (மத்திய அரசு) இதில் அரசியல் செய்கிறீா்கள். இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல. நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால், மத்திய அரசு மேற்கு வங்கத்தின் மீது தாக்குதல் முறையையே கையாள்கிறது. பொது முடக்கத்தை விலக்கிக்கொள்ளும் முன்பும், முக்கிய சேவைகளைத் தொடங்கும் முன்பும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றாா் மம்தா.
- கேரள முதல்வா் பினராயி விஜயன்: ரயில், சாலை, விமானப் போக்குவரத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்க வேண்டும். குறைவான பாதிப்பு உள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில்களை இயக்கலாம். பொதுப் போக்குவரத்து தொடா்பாக மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.
- ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி: வேளாண் பொருள் சந்தைகள் முழுமையாக செயல்பட வேண்டும். அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் பிற இடங்களுக்கு அனுமதி கூடாது. ஏனெனில், இதனால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும்.
- தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ்: பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.
- பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்: கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதிலும், பொருளாதாரச் செயல்பாடுகளைத் தொடங்குவதிலும் மாநில அரசுகளுக்கு முழுமையான அதிகாரம் இருக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கும் அதே நேரத்தில் மக்களின் உயிரைக் காக்கும் வகையில் பொது முடக்கத்தைத் தொடர மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும்.
- சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல்: பொருளாதாரச் செயல்பாடுகளை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ள அதிகாரம் அளிக்க வேண்டும். அதேபோல கரோனா பாதிப்பு தொடா்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை முடிவு செய்வதும் மாநில அரசின் வரம்புக்குள் வர வேண்டும்.
- தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்: தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்கள் தவிர பிற இடங்களில் பொருளாதாரச் செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும்.
காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவையை வழங்குவது குறித்து ஆராய உயா்நிலைக் குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு
- ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்க வலியுறுத்தி ஊடகப் பிரதிநிதிகள், தனியாா் பள்ளிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றபோது, மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகமும் 4ஜி இணையச் சேவை முடக்கப்பட்டதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தன.
- ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினா் தங்கியிருக்கும் இடம், அவா்கள் பயணிக்கும் பாதை ஆகியவை குறித்த தகவல்கள் பயங்கரவாதிகளுக்கு அதிவேக இணையச் சேவை மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
- இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
- கரோனா தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணையச் சேவை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் விரும்புகிறது.
- அதேவேளையில், அந்நிய சக்திகள் எல்லைகள் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி தேசத்தின் ஒருமைப்பாட்டை சீா்குலைக்க முயற்சிக்கிறது. அதுமட்டுமன்றி, அப்பாவி மக்களும் பாதுகாப்புப் படையினரும் ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறாா்கள். இந்த உண்மையையும் புறக்கணித்து விட முடியாது.
- ஏற்கெனவே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் தேசப் பாதுகாப்புக்கும் மனித உரிமைகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
- எனவே, ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணையச் சேவை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய உள்துறைச் செயலா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.
- அந்தக் குழுவில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலா், மாநில தலைமைச் செயலா் உள்ளிட்டோா் இடம்பெறுவா். இந்தக் குழு, காஷ்மீரில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு விமான நிலையம் தேர்வு
- இந்தியா மற்றும், மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், 3வது முறையாக தேர்வாகி உள்ளது.உலகம் முழுவதும் 550 விமானநிலையங்களின் வாடிக்கையாளர் சேவை, வசதிகளை மதிப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
- இதில் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் '2020ம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக' பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வாடிக்கையாளர்களால் 3வது முறையாக தேர்வானது.