நிலவில், 'லேண்டர்' சாதனம் கண்டுபிடிப்பு
- நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்யும் வகையில், 'சந்திரயான் - 2' விண்கலத்தை, இஸ்ரோ செலுத்தியது. இதனுடன் அனுப்பப்பட்ட லேண்டர் சாதனத்தை, நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறக்க திட்டமிடப்பட்டது.
- லேண்டர் சாதனத்தை தரையிறக்கும் முயற்சி நடந்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் இருந்து, 2.1 கி.மீ., தொலைவில் இருந்தபோது, லேண்டர் சாதனத்துடனான, இஸ்ரோ கட்டுப்பாடு மையத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
- கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த, விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள, 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம், நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. '
நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் பங்கேற்பு
- டில்லி அருகே நடைபெற உள்ள சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பாலைவனமாக்கலை எதிர்த்து ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு உ.பி., மாநிலம் நொய்டாவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
- மேற்கண்ட காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்து கடந்த 1996-ல் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா உட்பட 196 நாடுகள் கையெழுத்திட்டன.
- இந்த அமைப்பின் நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வரும் நிலையில் இது குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை
- ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழிசை கவர்னராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கானாவில் முதல் பெண் கவர்னராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிழக்கு மத்திய ரயில்வே வருவாயில் புது சாதனை
- இந்திய ரயில்வேயில், கிழக்கு மத்திய மண்டலம், ஆகஸ்ட் மாதத்தில் 1,588 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது.பீஹார் மாநிலம், ஹாஜிபூரை தலைமையிடமாக வைத்து, கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் செயல்பட்டு வருகிறது.
- இதில், 1,331 கோடி ரூபாய், சரக்கு போக்குவரத்து மூலமாகவும், 237 கோடி ரூபாய், பயணியர் போக்குவரத்து மூலமாகவும் ஈட்டப்பட்டுள்ளது.
- கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தை தொடர்ந்து, தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், 1,522 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, இரண்டாமிடத்தையும், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம், 1,517 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
ரஃபேல் நடால்: 5 மணி நேரம் போராடி 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்
- யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டனில் மெட்விடேவை வீழ்த்தி 19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
- 33 வயதாகும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால், 7-5, 6-3, 5-7, 4-6 மற்றும் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- இந்த வெற்றியின் மூலம் ஸ்விஸ் நாட்டை சேர்ந்த தனது சக போட்டியாளரும், மற்றொரு ஜாம்பவான் வீரருமான ரோஜர் பெடரரின் அதிக கிராண்ட்ஸ்லாம் (20 கிராண்ட்ஸ்லாம்) என்ற சாதனையை சமன் செய்யும் தூரத்துக்கு நடால் வந்துள்ளார்.
எம்சிசி-முருகப்பா ஹாக்கி: தங்க கோப்பையை தக்கவைத்தது ஐஓசி
- எம்சிசி - முருகப்பா தங்க கோப்பை ஹாக்கித் தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) அணி, பஞ்சாப் நேஷனல் வங்கி அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
- எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஐஓசி அணி 3-1 என்ற கோல் கணக்கில்வெற்றியை வசப்படுத்தியது.
- அந்த அணியின் குர்ஜிந்தர் சிங் 2 கோல் (23வது, 28வது நிமிடத்தில் பெனால்டி கார்னர்), தீபக் தாகூர் 1 கோல் (59வது நிமிடம், பீல்டு கோல்) அடித்தனர். பஞ்சாப் வங்கி சார்பில் விஷால் (12வது நிமிடம், பி.சி.) ஆறுதல் கோல் போட்டார்.
- பட்டம் வென்ற ஐஓசி அணியினர் முருகப்பா கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.