சுற்றுலா துறையில் சிறந்து விளங்கியதற்காக ஆந்திராவுக்கு விருது
- சுற்றுலா துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 74 விருதுகள், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
- இதன்படி, 2017 - 18ல், சுற்றுலா துறையில் ஒட்டுமொத்த பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில மாக, ஆந்திரா தேர்வு செய்யப்பட்டது.
நாட்டிலேயே முதல் மாவட்டம் 13 ஆண்டுகளாக ரேபிஸ் இல்லை
- நாய் மற்றும் வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் மிக மோசமான நோய்களில் ஒன்றுதான் ரேபிஸ். நாய், வௌவால்,குதிரை போன்ற விலங்குகளை மிக எளிதில் தாக்கும் இந்த வைரஸ் அவற்றையும் ஆட்டிவைக்கிறது.
- அதே சமயம் ரேபிஸ் தொற்று உள்ள விலங்குகள் மனிதர்களை கடிக்கும்போது மனிதர்களுக்கும் இந்த வைரஸ் ரத்தத்தில் கலந்து நம்பமுடியாத மோசாமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
- உலகில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு மனிதன் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக சுகாதார ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறன்றனர்.ரேபிஸ் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற தீவிரத்தில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த லூயி பாஸ்டியர் (Louis Pasteur) இறந்த தினமான செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- ரேபிஸ் நோய் தடுப்புக்கும் நீலகிரிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.லூயி பாஸ்டியர் பெயரில் 1907 ம் ஆண்டு குன்னூரில் ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டு தமிழகம், கேரளா,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ரேபிஸை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றி வருகிறது.
- இது மத்திய அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டாக ரேபிஸ் நோய் கண்டறியப்படவில்லை.
ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்க மதுரை மாணவிக்கு அழைப்பு
- மதுரை மாவட்டம் இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயின்ற மாணவி, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உரையாற்ற உள்ளார்.
- இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்தவர் பிரேமலதா (21) . இவர், இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடக் கல்வியோடு மனித உரிமைக் கல்வியையும் படித்துள்ளார்.
- ஐ.நா. மனித உரிமைக் கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி செயல்படுத்தப்படும் விதம், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்த "எ பாத் டூ டிக்னிட்டி' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது.
- அந்த குறும்படத்தில் வரும் ஒரு காட்சியில், கடந்த 2010-11-இல் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிரேமலதா, மனித உரிமைக் கல்வியின் முக்கியத்துவம், சாதிய பாகுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
- தற்போது, இளங்கலைப் பட்டம் முடித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ள பிரேமலதாவுக்கு, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது.