கீழடியில் மூடியுடன் பானை கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடக்கும் 5ம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- அகழாய்வில் இதுவரை வட்டப்பானை, இரட்டைச்சுவர், உறைகிணறுகள், தண்ணீர் தொட்டி, பானை ஓடுகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
- இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சிதிலமடைந்தும் மூடியின்றியும் கிடைத்தன.தற்போது தரை தளமும் அருகில் மேலும் ஒரு தளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- அதில், பானை முழுமையாகவும் மூடி மட்டும் சிதிலமடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இந்த தளம் சமையலறையாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.
- அகழாய்வை தொடர்ந்தால் முழு கட்டடம் வெளியே தெரிய வாய்ப்புள்ளது.மற்றொரு இடத்தில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் சிறிய அளவிலான இரண்டிற்கும் மேற்பட்ட பானைகள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன.
- அகழாய்வு இம்மாத இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு பானைகள் கிடைத்து வருவது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் நியமனம்
- உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது.
- அதன்படி, ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- முன்னதாக, இவர்களது பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 31-இல் இருந்து 34-ஆக உயர்த்தி, மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.
- தற்போது தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் பணியில் உள்ளனர். புதிய நீதிபதிகளின் நியமனம் மூலம் இந்த எண்ணிக்கை 34-ஆக உயர்ந்திருக்கிறது.
மெட்ரிக் பள்ளி இயக்ககம், தனியார் பள்ளி இயக்ககமாக மாற்றி அரசானை வெளியீடு
- அரசு உதவி பெறாத பள்ளிகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், அனைத்தும் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த அரசிதழையும் வெளியிட்டுள்ளது.
- மேலும் மெட்ரிக் பள்ளி இயக்ககத்தை தனியார் பள்ளி இயக்ககமாக மாற்றியும் தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இ - சிகரெட்டுக்கு உடனடி தடை: மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு
- இ - சிகரெட் உட்பட, 'என்ட்ஸ்' எனப்படும், மின்னணு நிகோடின் புகைக்கும் சாதனங்களுக்கு உடனடியாக தடை விதிக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 'என்ட்ஸ்' எனப்படும் மின்னணு நிகோடின் புகைக்கும் சாதனங்களில், புகையிலைப் பொருட்கள் எரிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, திரவ நிலையில் உள்ள ரசாயனம் பயன்படுத்தப் படுகிறது.
- இது சூடுபடுத்தப்படுவதன் மூலம் வெளியாகும் ஆவியை, உள்ளிழுக்கின்றனர்.இ - சிகரெட், இ - ஷீஷா, இ - நிகோடின் கலக்கப்பட்ட ஹூக்கா என, இதில், பல்வேறு வகைகள் உள்ளன. இதில், அதிகம் பிரபலமானது, இ - சிகரெட். புகையில்லாததால், இது வழக்கமான சிகரெட்டைவிட ஆபத்து குறைவானது என, பிரசாரம் செய்யப்படுகிறது.
- ஆனால், 'வழக்கமாக பயன்படுத்தப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விட இது மிகவும் ஆபத்தானது' என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத்
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத் வெண்கலம் வென்றார்.
- கிரீஸ் வீராங்கனை மரியா பிரிவோலரகியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.