Type Here to Get Search Results !

மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019 / INDIAN MOTOR LAW 2019


  • மோட்டார் வாகன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிய விதிகள் நிறைய அமலுக்கு வந்து இருக்கிறது. இனி அபாரதங்கள் இதன் மூலம் கூடுதலாக விதிக்கப்படும் .
  • சில நாட்களுக்கு முன் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதையடுத்து தற்போது மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
  • மொத்தம் 93 மாற்றங்கள் இந்த புதிய மசோதாவில் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய விதிமுறைகள் நிறைய தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் பல விதி மீறல்களுக்கு அபராத தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



மாற்றப்பட்ட விதிகள்

  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் 5,000 ரூபாய் வசூலிக்கப்படும். முன்பு 500 ரூபாய்.
  • காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
  • இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்.
  • வாகனத்தை விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம்.
  • பொது விதிமுறைகளை மீறும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • குடித்துவிட்டு ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம். முன்பு 2000 ரூபாய் அபராதம்.
  • காப்பீடு இல்லாமல் ஓட்டினால் 2000 ரூபாய் அபராதம். முன்பு ஆயிரம் ரூபாய்.
  • அதிக எடை சுமந்து சென்றால் 2000 ரூபாய் அபராதம். முன்பு வெறும் 200 ரூபாய் மட்டுமே அபராதம்.
  • வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு இனி அபராதம் 500 ரூபாய். முன்பு 100 ரூபாய்.
  • ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவது இதன் மூலம் சரி செய்யப்படும்.
  • வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை.
  • 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் மேலும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel