- நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறைவான செலவில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கச்செய்வதும், குறிப்பாக போதிய வசதிகளற்ற மாநிலங்களில் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதுமே பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் நோக்கமாகும்.
அமலாக்கம்
முதல்கட்டம்
- பிரதமரின் சுகாதாரப் காப்பிட்டுத்திட்டத்தின் முதல்கட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டது. அனைத்திந்திய மருத்துவ சேவை நிறுவனம் (AIMS- எய்ம்ஸ்) போன்ற ஆறு புதிய நிறுவனங்களை ஏற்படுத்துவதும், தற்போதுள்ள 13 அரசு மருத்துக் கல்லூரிகளை எய்ம்ஸ் தரத்திற்கு உயர்த்துவதும் ஆகும்.
- எய்ம்ஸ் தரத்திலான ஆறு புதிய நிறுவனங்களை, பீகார் (பாட்னா), சத்தீஸ்கர் (ராய்ப்பூர்), மத்திய பிரதேசம் (போபால்), ஓடிசா (புவனேஸ்வரம்), இராஜஸ்தான் (ஜோத்பூர்), உத்தராஞ்சல் (ரிஷிகேஷ்) ஆகிய ஆறு மாநிலங்களில் தலா ஒன்று என்ற கணக்கில் ஏற்படுத்துவது முடிவாகியுள்ளது.
- ஒவ்வொன்றுக்கும் உத்தேசச் செலவு ரூ. 840 கோடி. இந்த மாநிலங்கள் யாவும், கல்வியறிவு, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை போன்ற சமூக - பொருளாதாரக் காரணிகள், மக்கள் தொகைக்கும் மருத்துவமனை படுக்கை வசதிகளுக்கும் இடையேயான விகிதம், தீவரமான தொற்று நோய்கள் பிடித்துள்ள அளவு, குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதாரக் குறியீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்டன.
- இவை ஒவ்வொன்றிலும் தலா 960 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் (மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 500, சிறப்பு - உயர்சிறப்பு மருத்துவத்திற்கு 300, தீவரக்கண்கானிப்பு – விபத்துத்தீவர சிகிச்சைக்கு 30, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு மருத்துவத்திற்கு 30, ஆயுஷ்க்கு 30 என்ற கணக்கில்) ஏற்படுத்தப்பட்டு, 42 விதமான சிறப்பு - உயர்சிறப்பு மருத்துவ வசதிகள் வழங்கப்படும்.
- இவை ஒவ்வொன்றிலும் தலா நூறு இளநிலை மருத்துவ படிப்பு (MBBS) மாணவர்கள் சேர்க்கப்படுவதுடன், இந்திய மருத்துவக்கழகத்தின் பரிந்துரைப்படி முதுநிலை – ஆராய்ச்சி மருத்துவப்படிப்புகளும், செவிலியர் கல்லூரிகளும் தொடங்கப்படும்.
- இதை தவிர தற்போது பத்து மாநிலங்களில் செயல்பட்டு வரும் 13 மருத்துவ நிறுவனங்கள் தலா ரூ. 120 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.
- இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 100 கோடி, மாநில அரசின் பங்கு ரூ. 200 கோடி அவை:
- அரசு மருத்துவகல்லூரி, ஜம்மு
- அரசு மருத்துவக்கல்லூரி, ஶ்ரீநகர்
- கெல்கத்தாமருத்துவ கல்லூரி, கொல்கத்தா
- சஞ்சய்காந்திமுதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மருத்துவக்கல்லூரி, வாரணாசி
- நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதரபாத்
- ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம், திருப்பதி
- அரசு மருத்துவக் கல்லூரி , சேலம்.
- பி.ஜே. மருத்துவக்கல்லூரி, பெங்களுரு
- அரசு மருத்துவகல்லூரி, திருவனந்தபுரம்
- ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனம், ராஞ்சி
- மானிய மருத்துவக்கல்லூரி மற்றும் ஶ்ரீ.ஜே.ஜே. குழும மருத்துவமனைகள், மும்பை.
இரண்டாம் கட்டம்
- பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மேற்கு வங்கத்திலும், உத்திர பிரதேசத்திலும் மேலும் இரண்டு எய்ம்ஸ் தரத்திலான நிறுவனங்களை ஏற்படுத்த அரசு அனுமதித்துள்ளது. மேலும் கீழ்க்கண்ட ஆறு மருத்துவ கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
- அரசு மருத்துவகல்லூரி, அமிர்தசரஸ்
- அரசு மருத்துவக்கல்லூரி, தாண்டா (இமாசலப்பிரதேசம்)
- அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை
- அரசு மருத்துவக்கல்லூரி, நாக்பூர்
- அலிகர் முஸ்ஸீம் பல்கலைக்கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி
- பண்டிட் பி.டி ஷர்மா மருத்து அறிவியல் பட்டமேற்படிப்பு நிறுவனம், ரோகத்
- இந்த எய்ம்ஸ் தரத்திலான நிறுவனம் ஒவ்வொன்றுக்குமான மதிப்பீட்டு செலவு ரூ.823 கோடி. தரம் மேம்படுத்துவதற்காக இரண்டாம் கட்டத்தில் தெரிவாகியுள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய அரசின் பங்காக தலா ரூ. 125 கோடி வழங்கப்படும்.
மூன்றாம் கட்டம்
- மூன்றாம் கட்டத்தில் கீழ்க்கண்ட மருத்துவக் கல்லூரிகளைத் தரம் உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவக்கல்லூரி, ஜான்சி (உத்திர பிரதேசம்)
- அரசு மருத்துவக் கல்லூரி, ரேவா (மத்திய பிரதேசம்)
- அரசு மருத்துவக்கல்லூரி, கோரக்புர் (உத்திர பிரதேசம்)
- அரசு மருத்துவகல்லூரி, தர்பங்கா (பீகார்)
- அரசு மருத்துவ கல்லுரி, கோழிக்கோடு (கேரளா)
- விஜய நகர மருத்துவ அறிவியல் நிறுவனம், பெல்லாரி (கர்நாடகா)
- அரசு மருத்துவ கல்லூரி, முஸாபர்புர் (பீகார்)
- தரம் மேம்படுத்துவதற்கான மதிப்பீட்டுச் செலவான ரூ.150 கோடியில், மத்திய அரசு ரூ. 125 கோடியை வழங்க, எஞ்சிய ரூ. 25 கோடியை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும்.