TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 44
1.கடல் வழியாக படையெடுத்துச் சென்று கடாரத்தை வென்றவன்
A.கரிகால் பெருவளத்தான்
B.முதலாம் இராஜராஜ சோழன்
C.இரண்டாம் நரசிம்மவர்மன்
D.முதலாம் ராஜேந்திரன்
(இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாரம்என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.)
2.சோழ மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கூறும் வரலாற்று ஆவணம்
A.முத்தொள்ளாயிரம்
B.கலிங்கத்துப்பரணி
C.விக்கிரம சோழன் உலா
D.புலியூர் நாடகம்
(விக்கிரம சோழன் உலா, உலா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூலாகும். மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் என்பார் இந்நூலை இயற்றினார். இவர் விக்கிரம சோழன் உலாவுடன், குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என்பவற்றையும் சேர்த்து மூவருலா எனப்படும் மூன்று உலா நுல்களை இயற்றியிருப்பினும், விக்கிரம சோழன் உலாவே அவற்றுள் முகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்நூல் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.விக்கிரம சோழன் உலா 342 கண்ணிகளால் அமைந்தது கண்ணியென்பது இரண்டு வரிகளைக் கொண்டது. இவற்றுள் முதல் 43 கண்ணிகளில் விக்கிரம சோழனின் முன்னோர் பெருமையும், விக்கிரம சோழன் பிறப்பும், பள்ளியெழுதல், நீராடல், இறைவனை வணங்குதல் போன்றவை கூறப்படுகின்றன.இந்நூல் கலிவெண்பா என்னும் பாவினால் அமைந்தது.)
3.குதிரையைக் குறிக்காத சொல்
A.கந்துகம்
B.கோணகம்
C.குந்தம்
D.வன்னி
4.'பாட்டினைப்போல ஆச்சரியம்
பாரின்மிசை இல்லையடா' - என்று பாட்டை வியந்தவர்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C.கண்ணதாசன்
D.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
5.பெருமழைப் புலவர் என்று அறியப்படும் அறிஞர்
A.காளமேகம்
B.வேங்கடசாமி நாட்டார்
C.திரு . வி . க
D.சோமசுந்தரனார்
(பொ. வே. சோமசுந்தரனார் (1909 செப்டம்பர் 5 – 1972 சனவரி 3) தற்கால உரையாசிரியர்; நாடகாசிரியர். வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். மேலப்பெருமழை என்னும் ஊரில் பிறந்ததால் பெருமழைப் புலவர் என அழைக்கப்பட்டார்)
6."மாற்றாங்கே" என்னும் புதுக்கவிதை நூலுடன் தொடர்புடைய கவிஞர்
A.கலாப்பிரியா
B.ஈரோடு தமிழன்பன்
C.தேவதேவன்
D.சி. மணி
(கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம்
வெள்ளம் (1973),தீர்த்தயாத்திரை (1973),மற்றாங்கே (1980),எட்டயபுரம் (1982),சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985),உலகெல்லாம் சூரியன் (1993),கலாப்ரியா கவிதைகள் (1994),கலாப்ரியா கவிதைகள் (2000),அனிச்சம் (2000),வனம் புகுதல் (2003),எல்லாம் கலந்த காற்று (2008)
நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரைத் தொகுப்பு (2009),ஓடும் நதி - கட்டுரைத் தொகுப்பு (2010)
கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது (2010)
உருள் பெருந்தேர் - கட்டுரைத் தொகுப்பு (2011),நான் நீ மீன் - கவிதைகள் (2011)
“ உளமுற்ற தீ - கவிதைகள் (2013),“ சுவரொட்டி” - கட்டுரைத் தொகுப்பு (2013)
“ காற்றின் பாடல்” - கட்டுரைத் தொகுப்பு (2014).)
7.சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் சிறுகதை
A.சமுதாய வீதி
B.அன்பளிப்பு
C.முதலில்இரவு வரும்
D.அப்பாவின் சிநேகிதர்
(1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதை) (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன் )
8.சாகித்ய அகாதமியின் பரிசுப் பெற்ற புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்
A.அப்துல் ரகுமான்
B.வல்லிக்கண்ணன்
C.ஈரோடு தமிழன்பன்
D.சி சு செல்லப்பா
(1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்)
9.தமிழின் முதல் உரையாசிரியர்
A.ஆறுமுக நாவலர்
B.இளம்பூரணர்
C.நக்கீரர்
D.அடியார்க்கு நல்லார்
(இறையானர் களவியல் உரை
நூலின் பெயர் அகப்பொருள் அல்லது களவியல் ஆகும். இதனை இயற்றியவர் இறையனார் அல்லது சிவன். இதற்கு உரை எழுதியவர் நக்கீரர்.உரைச் சிறப்பின் காரணமாக இந்நூலே இறையனார் களவியல் உரை என்று வழங்கப்படுகிறது.தமிழில் தோன்றிய முதல் உரையாசிரியர் நக்கீரர். களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே சிறந்தது என்பவர்.)
10.சாகித்ய அகாதமி பரிசுப் பெற்ற முதல் தமிழ் நூல்
A.தமிழின்பம்
B.அலையோசை
C.அன்பளிப்பு
D.சக்கரவர்த்தி திருமகன்
(1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி)