Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 11 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 11

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)

இந்த பதிவில் தமிழ் - இலக்கணம் குறித்து பார்ப்போம்.

* தமிழ் மொழியில் உள்ள மிகப்பழமையான இலக்கணநூல் - தொல்காப்பியம்
* தொல்காப்பியத்தைச் சார்ந்து எழுந்த இலக்கணநூல் - நன்னூல்
* நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் (காலம் 12, 13 கி.பி.நூற்றாண்டு)
* நன்னூலில் உள்ள நூற்பாக்கள் - 462
* நன்னூலின் வேறு பெயர்கள் - சிற்றதிகாரம், சின்னூல், பின்னூல்
* நூல்கள் மூவகைப்படும் (அகத்தியம்-முதல் நூல், தொல்காப்பியம்-வழிநூல், நன்னூல்-சார்பு நூல்(புடை நூல்)
* எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும் - பன்னிரண்டு
* மனிதர்களைப் போல எழுத்துக்களுக்கும் நட்பும், இனமும் உண்டு.
* நட்பு எழுத்துக்களை இன எழுத்துக்கள் என மரபிலக்கணம் கூறுகிறது.
* எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை. முதல் எழுத்து, சார்பெழுத்து
* முதல் எழுத்துக்கள் - 30 (உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 18)
* சார்பெழுத்துக்கள் - 10
* தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247
* குறில் எழுத்துக்கள் - 5, நெடில் எழுத்துக்கள் - 7
* உயிர்மெய் குறில் எழுத்துக்கள் - 90.
* உயிர்மெய் நெடில் எழுத்து - 126
* மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். (வல்லினம்-6, மெல்லினம்-6, இடையினம்-6)
* தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் - உடனிலைமெய்மயக்கம்
* ர, ழ - என்னும் இரண்டு மெய்களும் தம்முடன் தான் மயங்காது.
* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
* ஆய்தம் சார்பெழுத்து வகையைச் சேர்ந்தது.
* உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்து வகையில் அடங்கும்.
* ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அக்கேணம் என்பவன.
* ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
* சுட்டுப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்.
* சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை தருவது - அகச்சுட்டு (எ.கா. அவன், இவன்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel