Type Here to Get Search Results !

Dinamani TNPSC Model Questions with Answers 2016


தினமணி  டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை 2016

இராசராச சோழனின் வில், வாள், முரசு, கொடி, குடை குறித்து கூறப்படுபவை:
வில் - இந்திரனை வென்றது, பெருங்கடலை வற்றச் செய்தது.
வாள் - சோழ நாட்டிற்குக் காவிரி செல்ல மலையை வெட்டி வழி
அமைத்தது. வானத்தில் அசைந்த நகரத்தை அழித்தது.
முரசு - சேரனை வென்று பெற்ற கடப்பமரத்தால் செய்யப்பட்டது. காவிரிக்கு அணைகட்ட பகைவரை மண் சுமக்கச் செய்தது.
கொடி - மேருமலையை வலம் வந்தது. இந்திரனைப் புலியாகக் கொண்டது.
குடை - மக்களைக் காப்பதற்கு அண்ட கூடத்தை ஒத்து நின்றது.

வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:
பிழை: வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா
பிழை: அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள
பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்
பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை
பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா
பிழை: ஒன்றோ அல்லது இரண்டோ தருக
திருத்தம்: ஒன்றோ இரண்டோ தருக
பிழை: சென்னை என்ற நகரம்
திருத்தம்: சென்னை என்னும் நகரம்
பிழை: எனது மகன்
திருத்தம்: என் மகன்
பிழை: ஏற்கத் தக்கது அல்ல
திருத்தம்: ஏற்கத் தக்கது அன்று
பிழை: அவளது தந்தை
திருத்தம்: அவள் தந்தை
பிழை: புலி வந்தன
திருத்தம்: புலி வந்தது
பிழை: எருதுகள் ஓடியது
திருத்தம்: எருதுகள் ஓடின
பிழை: பூக்கள் மலர்ந்து மணம் வீசியது
திருத்தம்: பூக்கள் மலர்ந்து மணம் வீசின
பிழை: இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
திருத்தம்: இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
பிழை: எனக்குப் பல வீடுகள்உள
திருத்தம்: எனக்கு வீடுகள் பல உள்ளன
பிழை: இது பொது வழி அல்ல
திருத்தம்: இது பொது வழி அன்று
பிழை: விழாவில் பல அறிஞர் பேசினர்
திருத்தம்: விழாவில் அறிஞர்கள் பலர் பேசினர்
பிழை: தென்றல் மெல்ல வீசின
திருத்தம்: தென்றல் மெல்ல வீசியது
பிழை: வாகனத்தை இடது பக்கம் திருப்பாதே
திருத்தம்: வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே
பிழை: பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
திருத்தம்: பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது
பிழை: வலது பக்கச் சுவரில் எழுதாதே
திருத்தம்: வலப்பக்கச் சுவரில் எழுதாதே
பிழை: ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
திருத்தம்: ஒவ்வொரு சிற்றூரிலும் ஊராட்சி உள்ளது.
பிழை: மாணவர்கள் கல்வியறிவு ஒழுக்கத்திற் சிறந்து விளங்க வேண்டும்.
திருத்தம்: மாணவர்கள் கல்வியறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிழை: அவர் தான் கூறினார் இவர் தான் கூறினார் என்று பாராது எவர் தான் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க
திருத்தம்: அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.
பிழை: நல்லவகைளும் கெட்டவைகளும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
திருத்தம்: நல்லனவும், கெட்டனவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
பிழை: கண்ணன் முருகன் மற்றும்வேலன் வந்தனர்.
திருத்தம்: கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.
பிழை: சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
திருத்தம்: சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமரி அன்று.
பிழை: தலைவி தலைவனோடு சென்றார்
திருத்தம்: தலைவி தலைவனோடு சென்றாள்
பிழை: இதனைச் செய்தவர் இவரல்லவா?
திருத்தம்: இதனைச் செய்தவர் இவரல்லரோ?
பிழை: பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
திருத்தம்: பெரியனவும், சிறியனவுமான சாமான்களைச் செய்கிறார்கள்.

மரபு வழூஉச்சொற்களை நீக்கி எழுதுதல்
* காகம் கூவும், நாய் கத்தும்
- காகம் கரையும், நாய் குரைக்கும்
* காட்ல யானை கத்தியது, புலி கூவியது
- காட்டில் யானை பிளிறியது, புலி உறுமியது
* நீரின்றி நஞ்சையும், புஞ்சையும் விளையவில்லை
- நீரின்றி நன்செய்யும், புன்செய்யும் விளையவில்லை
* யானை மேய்ப்பனோடு ஆட்டுப் பாகனும் வந்தான்
- யானைப் பாகனோடு ஆட்டு இடையனும் வந்தான்
* கரும்புத் தோப்புக்கு அருகாமையில் நாய் கத்தியது
- கரும்புக் கொல்லைக்கு அருகில் நாய் குரைத்தது.
* மயில் கூவ, குயில் அகவ, கிளி பாடியது
- மயில் அகவ, குயில கூவ, கிளி பேசியது
* தேயிலைத்தோப்புக்கு அருகில் பலாத் தோட்டம் உள்ளது.
- தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் பலாத் தோப்பு உள்ளது.
* சோளக்காடு - ஆலங்கொல்லை
- சோளக் கொல்லை - ஆலங்காடு
* குதிரைத் தொழுவம் - யானை கொட்டில்
- குதிரைக்கொட்டில் - யானைக் கூடம்
* தோட்டத்தில் வாழைச்செடியும் மாஞ்செடியும் நட்டனர்.
- தோட்டத்தில் வாழைக் கன்றும், மாங்கன்றும் நட்டனர்.

கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுதல்
* அப்பிசி மாசம் அடமள இம்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
* கோளி முட்டை தாவாரத்தில் உருண்டது.
- கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது
* வெடியங்காட்டியும் வெத்திலை போடறது ஒரு பளக்கமா?
- விடிவதற்குள் வெற்றிலை போடுவது ஒரு பழக்கமா?
* ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
- ஒருவன் ஒன்றியாய்ப் போனால் அது ஊர்வலம் ஆகுமா?
* கொடுத்த செய்தியைக் கோர்வைவயாய்ப் பேசு
- கொடுத்த செய்தியைக் கோவையாய்ப் பேசு
* சோறு தின்று, பழம் உண்டு,பால் சாப்பிட்டுப் படுத்தான்.
- சோறு உண்டு, பழம் தின்று, பால் பருகிப் படுத்தான்.
* ஆத்தங்கரையில் அஞ்சு காணி நஞ்சை நிலம் இருக்கு.
- ஆற்றங்கரையில் ஐந்து காணி நன்செய் நிலம் உள்ளது.
* வலது பக்கச் சுவற்றில் எழுதாதே
- வலப்பக்கச் சுவரில் எழுதாதே
* நஞ்சையும் புஞ்சையும் காஞ்சி போயின.
- நன்செய்யும் புன்செய்யும் காய்ந்து போயின.
* அண்ணாக் கயிறு அறுந்தது.
- அரைஞாண் கயிறு அறுந்தது.

பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுதல்
* "ஸ்ரீ மான் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நாம கரணத்தை இந்தக் கப்பலுக்குச் சூட்டுவதில் ஸந்தோஷமடைகிறேன்". என்றார் மூதறிஞர் இராஜாஜி.
* திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பெயரை இந்தக் கப்பலுக்குச் சூட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் மூதறிஞர் இராசாசி.
*    ‘டி.வி.யில் சீரியல் பார்க்காவிட்டால் லைஃபே போர் அடித்துவிடும்’ என்கிறாள் பாட்டி.
'தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்காவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்’   என்கிறாள் பாட்டி.
*இந்த செஞ்சுரி ‘டென்ஷன்’ நிறைந்தது.
இந்த நூற்றாண்டு மனஅழுத்தம் நிறைந்தது.
* ஸ்லிம்மாக இருப்பதே பியூட்டி என்ற எண்ணம் பரவி வருகிறது.
- உடல் மெலிவாக இருப்பதே அழகு என்ற எண்ணம் பரவி வருகிறது.
* நமஸ்காரம் என்று சாஸ்டாங்கமாக விழுந்தவனை ஆசிர்வதித்தேன்.
- வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்.
* பிரயாணி பிரயாணத்தை ரத்து செய்தவுடன் ரூபாய் பட்டு வாடா செய்யப்பட்டது.
- பயணி பயணத்தை விலக்கியவுடன் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது.
* செல்வனுக்கும் கிள்ளைக்கும் தலா ஐந்து புஸ்தகம் கொடு.
- செல்வன், கிள்ளை ஆகிய ஒவ்வொருவருக்கும் ஐந்து புத்தகங்கள் கொடு.
* குறிஞ்சி தாக்கல் செய்த வழக்கு சுமூகமாகப் பைசல் செய்யப்பட்டது.
- குறிஞ்சி தொடுத்த வழக்கு நல்ல முறையில் முடிக்கப் பெற்றது.
* சந்நிதியில் சகல ஜனங்களும் உபந்நியாசம் கேட்கத் திரண்டிருந்தனர்.
- கோவிலில் மக்கள் அனைவரும் ஆன்மீக உரை கேட்கத் திரண்டிருந்தனர்.
* பந்து மித்திரர் சகிதம் வந்து ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.
- உறவினர், நண்பர்களுடன் வந்து வாழ்த்திட வேண்டுகிறேன்.
* என் ஏக புதல்வனின் ஜானவாசத்திற்குச் சகலரும் வரணும்.
- என் ஒரே மகனின் மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் வரவேண்டும்.
* ஸ்ரீ ரங்கத்தில் ஸ்வாமி ஸ்ரீ ரங்கநாதர்கோவில் கொண்டுள்ளார்.
- திருவரங்கத்தில் இறைவன் திருவரங்க நாதர் கோவில் கொண்டுள்ளார்.
* ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- திருவரங்கத்தில் திருவரங்க நாதருக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
* நான் செய்த தவறுக்கு சகல ஜனங்களும் என்னை ஷமித்தருள வேண்டும்.
- நான் செய்த தவறுக்கு மக்கள் அனைவரும் என்னை மன்னித்தருள வேண்டும்.
*   “வீக்கான என் ஆன்ட்டி ரெஸ்ட் எடுக்க வேண்டும்” என்று ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் அட்வைஸ் கூறினார். 
    “உடலநலம் குறைந்த என் அத்தை ஓய்வு எடுக்க வேண்டும்” என்று இதயவியல் வல்லுநர் அறிவுரை கூறினார்.
* டயாபெட்டிக் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.
- நீரிழிவு நோயாளி இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தம் செய்ய வேண்டும்.

இலக்கணக் குறிப்பு:
பண்புத் தொகை: மை விகுதி மறைந்து வருவது
கூர்ம்படை, கருங்காக்கை, தண்குடை, கருமுகில், நெடுந்தேர், நெடுந்தேர், நெடுந்தகை, பச்சூன், முதுமரம், பசுங்கால், பெருந்தேர், நல்லுரை, வெஞ்சுடர், முச்சங்கம், முக்குடை, தீநெறி
வினைத் தொகை: காலம் மறைந்து வருவது
திருந்துமொழி, திரைகவுள், புனைகலம், ஓழுகுநீர், படர்முகில்,  அலைகிடல், வீங்குநீர், உறுகுறை, களிநடம், படர்முகில், விரிநகர், தாழ்பிறப்பு, ஈர்வளை, அலைகடல், உயர்எண்ணம்
உறைவேங்கடம், அசல்முகில், நிறைமதி
அடுக்குத்தொடர்: ஒரே சொல் அடுக்கி வருவது
தினந்தினம், அறைந்தறைந்து வாழியவாழிய, சுமைசுமையாய், துறைதுறையாய், விக்கிவிக்கி, புடைபுடை,
உரிச்சொல்: பெயர்ச்சொல்லைச் சிறப்பிப்பது
மாநகர், மல்லல்மதுரை, தடந்தோள், கடிநகர், வைவாள், நாமவேல், வைவேல், மாமதுரை, மாமலை
செய்யுளிசை அளபெடை (இசைநிறையளபெடை) படூஉம்
சொல்லிசையளபெடை: தழீஇ, தீதொரீஇ, செலீஇய
இன்னிசையளபெடை: தாங்குறூஉம், வளர்க்குறூஉம்
எண்ணும்மை: 'உம்' வெளிப்படையாக வருவது
வையகமும் வானகமும், வாயிலும் மாளிகையும்
மலர்தலும் கூம்பலும், கங்கையும் சிந்துவும்
தந்தைக்கும் தாய்க்கும், விண்ணிலும் மண்ணிலும்
பேரோடும் புகழோடும், மாடமும் ஆடரங்கும்
உருவகம்: உவமை உவமேயம் இரண்டையும் ஒன்றாக்குவது.
கண்ணீர்வெள்ளம், மதிவிளக்கு, பசிக்கயிறு, கைம்மலை
பொற்கரை, தங்கத்திமிங்கலம், தங்கத்தோணி
விளங்கோல் வினைமுற்று: வாழிய, செய்க
எதிர்மறை வியங்கோள் வினைமுற்று: மறவற்க, துறவற்க

பொருத்துக.
1.திணை --- பாடியோர
அ) குறிஞ்சி - 1) ஓரம்போகியார்
ஆ) முல்லை - 2) அம்மூவனார்
இ) மருதம் - 3) ஓதலாந்தையார்
ஈ) நெய்தல் - 4) கபிலர்
                          - 5) பேயனார்
விடை:
அ - 4
ஆ - 5
இ - 1
ஈ - 2

நூல் - ஆசிரியர்
அ) மணிமேகலை  - 1) கிருஷ்ணப்பிள்ளை
ஆ) தேவாரம்            - 2) உமறுப்புலவர்
இ) சீறாப்புராணம்  - 3) சீத்தலைச்சாத்தனார்
ஈ) இரட்சணிய யாத்திரிகம் - 4) சுந்தரர்
                                        - 5) குணங்குடி மஸ்தான்
விடை:
அ - 3
ஆ - 4
இ - 2
ஈ - 1

நூல் - ஆசிரியர்
அ) மணிமேகலை - 1) சமணம்
ஆ) நீலகேசி             - 2) கிறித்தவம்
இ) இரட்சணிய யாத்திரிகம் - 3) இசுலாம்
ஈ) சீறாப்புராணம் - 4) பௌத்தம்
                                       - 5) வைணவம்
விடை:
அ - 4
ஆ - 1
இ - 2
ஈ - 3

நூல் - ஆசிரியர்
அ) இராசராசசோழனுலா - 1) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
ஆ) திருவேங்கடத்தந்தாதி - 2) குமரகுருபவர்
இ) மதுரைக் கலம்பகம் - 3) ஆசிரியர் பெயர் அறியவில்லை
ஈ) முக்கூடற்பள்ளு - 4) ஒட்டக்கூத்தர்
                                            - 5) காரைக்கால் அம்மையார்
விடை:
அ - 4
ஆ - 1
இ - 2
ஈ - 3
புலவர்கள் - இயற்றிய நூல்கள்
அ) இளங்கோவடிகள் - 1) மணிமேகலை
ஆ) திருத்தக்க தேவர் - 2) சிலப்பதிகாரம்
இ) நாதகுத்தனார் - 3) சீவகசிந்தாமணி
ஈ) சீத்தலைச்சாத்தனார் - 4) வளையாபதி
                                                      -5) குண்டலகேசி
விடை:
அ - 2
ஆ - 3
இ - 5
ஈ - 1


Searches related to DINAMANI TNPSC

  • dinamani tnpsc current affairs
  • dinamani tnpsc pdf
  • ias academy dinamani questions
  • dinamani tnpsc questions answers 2016
  • dinamani tnpsc tamil
  • google dinamani tamil news paper
  • dinamani tnpsc questions 2015
  • ias academy study materials

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel